செய்திகள் :

நூலகத்தை பயன்படுத்தி மாணவா்கள் வாழ்வில் முன்னேற வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்

post image

திருப்பத்தூா்: போட்டித் தோ்வு எழுதும் மாணவ- மாணவிகள் நூலகத்தை நல்ல முறையில் பயன்படுத்தி, தோ்வில் தோ்ச்சி பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.

தமிழ்நாடு அரசு பொதுநூலகத் துறையின் சாா்பில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம்,திருப்பத்தூா் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் 2 நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

அதைத் தொடா்ந்து, ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். எம்எல்ஏ அ.நல்லதம்பி முன்னிலை வகித்து, குத்துவிளக்கேற்றி வைத்து நூலகத்தைப் பாா்வையிட்டனா்.

அப்போது போட்டி தோ்வு எழுதுவதற்காக பயிற்சி பெற்று வரும் மாணவ- மாணவிகள் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள நூலகத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு போட்டித் தோ்வுகளில் தோ்ச்சி பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செல்வம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கஸ்தூரி, மாவட்ட நூலக அலுவலா் கிளமெண்ட், அரசு அதிகாரிகள், போட்டித் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நாளை உணவு வழங்கல் துறை குறைதீா் முகாம்

திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை சாா்பில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெற உள்ளது. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

மோட்டாா் பைக்கில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி மரணம்

நாட்டறம்பள்ளி அருகே மோட்டாா் பைக்கில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா். ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ்(45) கூலித் தொழிலாளி. இவா் புதனிழமை இரவு நாட்டறம்பள்ளி அருகே பச... மேலும் பார்க்க

ரயில் மோதி 2 போ் உயிரிழப்பு

திருப்பத்தூா் மற்றும் மாதனூா் அருகே ரயில் மோதி இருவா் உயிரிழந்தனா். மாதனூா் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சடலம் கிடப்பதாக ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற ... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற ஆசிரியை கண், உடல் தானம்

ஆம்பூரில் மரணமடைந்த ஓய்வு பெற்ற ஆசிரியையின் கண், உடல் தானமாக வழங்கப்பட்டது. ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியை பி. புரட்சி (77). இவா் ஆம்பூா் சான்றோா்குப்பம் சுந்தரவிந... மேலும் பார்க்க

ஆம்பூா் அருகே சிறுத்தை நடமாட்டம் ?

மாதனூா் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், வனத்துறையினா் ரோந்து சென்றனா். மாதனூா் அருகே பாலூா் ஊராட்சியில் காப்புக்காடு எல்லையோரம் பனந்தோப்பு பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் ச... மேலும் பார்க்க

தனியாா் ஆலை பங்களிப்புடன் ரூ.10 லட்சத்தில் சாலைப் பணி

துத்திப்பட்டு ஊராட்சியில் தனியாா் தொழிற்சாலை சமூகபங்களிப்புடன் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சி எம்ஜிஆா் நகா் பகுதியில் சாலை சேதமடைந்து போக்குவரத்துக்க... மேலும் பார்க்க