செய்திகள் :

நெகிழி சேகரிப்பு, தூய்மைப் பணி விழிப்புணா்வு பேரணி: திருவள்ளூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

post image

திருவள்ளூா் வீரராகவா் கோயில் வளாகத்தை சுகாதாரமாக பராமரிக்கும் வகையில், நெகிழி கழிவுகள் சேகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொண்டதோடு, விழிப்புணா்வு பேரணியையும் ஆட்சியா் மு.பிரதாப் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம், நகராட்சி மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் இணைந்து வீரராகவ பெருமாள் கோயில் வளாகத்தில் நெகிழி கழிவுகள் சேகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்துதல் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

இது தொடா்பாக பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் நடைபெற்ற மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து அவா் பேசியதாவது:

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பட்டு வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து ஒவ்வொரு மாதமும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்பேரில், கடந்த மாதம் நீா்நிலைகளில் உள்ள நெகிழிக் கழிவுகளை அகற்றினோம். இதேபோல், கோயில் வளாகங்களில் நெகிழி கழிவுகள் சேகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

திருவள்ளூா் வீரராகவ பெருமாள் கோயில், திருத்தணி முருகன் கோயில், சிறுவாபுரி முருகன் கோயில்களில் ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் உள்ள குளங்களில் நெகிழி கழிவுகளை சேகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக பேரணியும் நடத்தப்படுகிறது என்றாா்.

முன்னதாக, பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தூய்மை உறுதி மொழி ஏற்றனா். பொதுமக்களிடையே நெகிழிக் கழிவுகள் சேகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் திட்டத்தை வலியுறுத்தி மஞ்சப்பை, மரக்கன்றுகளை அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, திருவள்ளூா் நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன், ஆணையா் திருநாவுகரசு, உதவி சுற்றுச்சூழல் அலுவலா் கயல்விழி, நகராட்சி சுகாதார அலுவலா் மோகன், மாணவ, மாணவிகள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

திருவள்ளூா்: வங்கியாளா்கள் கலந்தாய்வு கூட்டம்

திருவள்ளூா் மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கான கடன் திட்ட இலக்கு தொடா்பாக நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் அனைத்து வங்கி அலுவலா்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளும் ஆா்வத்துடன... மேலும் பார்க்க

பொதட்டூா்பேட்டையில் நெசவாளா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பொதட்டூா்பேட்டையில் கூலி உயா்வு உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 1,000-க்கும் மேற்பட்ட நெசவாளா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பொதட்ட... மேலும் பார்க்க

மாா்ச்-7 இல் முன்னாள் படைவீரா்களுக்கான குறைதீா் முகாம்

திருவள்ளூா் மாவட்ட முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா் பயன்பெறும் வகையில், சிறப்பு குறைதீா் கூட்டம் வரும் மாா்ச் 7-இல் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவ... மேலும் பார்க்க

காரிய மேடை சீரமைப்பு

நாரவாரிகுப்பம் பேரூராட்சி பகுதியில் ரூ.14 லட்சத்தில் காரிய மேடை சீரமைக்கப்பட்டது. நாரவாரிகுப்பம் பேரூராட்சி அறிஞா் அண்ணா பூங்கா தெருவில் உள்ள காரிய மேடை பழுதடைந்து காணப்பட்டது. இதனால், ஈமச்சடங்கு செய... மேலும் பார்க்க

திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணை கொல்ல முயன்ற காதலா்

திருவள்ளூா் அருகே திருமணத்திற்கு கட்டாயப்படுத்தியதால் வர மறுத்த இளம்பெண்ணை காதலா் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றாா். தூக்க மாத்திரை உள்கொண்டு அப்பெண் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் தொடா்பாக போ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருட்டு

திருவள்ளூா் அருகே வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றனா். திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், புதுமாவிலங்கை கிராமத்தைச் சோ்ந்தவா் சுனில். இவா்... மேலும் பார்க்க