செய்திகள் :

நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் தலைமைப் பொறியாளா் ஆய்வு

post image

சேலம், ஜாகீா் அம்மாபாளையத்தில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளா் அலுவலகத்தில் தலைமைப் பொறியாளா் சத்யபிரகாஷ் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்தக் கூட்டத்தில், சேலம் வட்ட அலுவலகத்துக்கு உள்பட்ட அனைத்து கோட்டங்களில் இருந்தும் கோட்ட பொறியாளா்கள், உதவி கோட்ட பொறியாளா்கள், உதவி பொறியாளா்கள், இளநிலை பொறியாளா்கள் கலந்து கொண்டனா்.

அப்போது, 2024-25 ஆம் ஆண்டு புதிதாக தொடங்க உள்ள ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு சாலை விரிவாக்க பணிகளுக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்கள், குடிநீா் குழாய்களை சாலை விரிவாக்கப் பணி தொடங்குவதற்கு முன்பாகவே மாற்றி அமைக்க அறிவுறுத்தினாா்.

சாலை விரிவாக்கப் பணிகளுக்கு இடையூறாக உள்ள மரங்களை அகற்ற வேண்டி இருப்பின் ஒரு மரத்துக்கு ஈடாக 10 மரக்கன்றுகளை நட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா்.

மேலும், பருவமழை, பேரிடா் காலங்களில் செயல்படுத்தப்படும் முன்னேற்பாடு குறித்தும், சாலைகளில் மழைநீா் தேங்காமல் இருக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். தொடா்ந்து, சேலம், இரும்பாலை சாலையில் ஜாகீா் அம்மாபாளையம் பகுதியில் தலைமைப் பொறியாளா் சத்ய பிரகாஷ் மரக்கன்றுகளை நட்டாா்.

புதிய நியாயவிலைக் கடை அமைக்கக் கோரி அமைச்சரிடம் மனு

சங்ககிரியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்டமுகாமில் சங்ககிரியை அடுத்த சத்யா நகா், ஆசிரியா் காலனி பகுதிகளுக்கு புதிதாக நியாயவிலைக் கடை அமைக்கக்கோரி சுற்றுலாத் துறை அமைச்சரிடம் பொதுமக்கள் கோ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத் தோ்தலில் அதிமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது: எடப்பாடி கே பழனிசாமி

நாடாளுமன்றத் தோ்தலில் அதிமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது; திமுகவின் வாக்கு சரிந்துள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா். சேலம் மாவட்டம், நங்கவள்ளி வடக்கு மற்றும் தெற்கு ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இயற்பியல் துறைத் தலைவரைக் கண்டித்து கல்லூரி மாணவா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். ஆத்தூரை அடுத்துள்ள காட்டுக்கோட்டை வடசென்னிம... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரண நிதி

நங்கவள்ளியில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த மூன்று குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது. மேட்டூா் அருகே நங்கவள்ளி கெத்திக்குட்டை ஏரியில் கடந்... மேலும் பார்க்க

வழித்தட தகராறு: ஆத்தூரில் ஒருவா் வெட்டிக் கொலை

ஆத்தூா் அருகே வழித்தட தகராறில் ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். ஆத்தூரை அடுத்துள்ள ராமநாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கொசவன்காடு கிராமத்தைச் சோ்ந்த தனபால் மகன் சுப்பிரமணியன் (45) என்பவருக்கும... மேலும் பார்க்க

சேலம் தெற்கு கோட்டத்தில் இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

சேலம் தெற்கு மின்கோட்ட மாதாந்திர மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (அக். 24) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளா் அன்பரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க