செய்திகள் :

நெடுஞ்சாலை, பொதுப் பணி உள்பட 3 துறைகளில் 412 போ் பணி நியமனம்: ஆணைகளை வழங்கினாா் முதல்வா்

post image

நெடுஞ்சாலை, பொதுப் பணி உள்பட மூன்று துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்குத் தோ்வு செய்யப்பட்ட 412 பேருக்கு நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நெடுஞ்சாலைத் துறையில் உதவிப் பொறியாளா் பணியிடங்களுக்கு 45 போ் தோ்வு செய்யப்பட்டனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலமாக தோ்வு செய்யப்பட்டவா்களில் 5 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

இதேபோன்று, பொதுப் பணித் துறையிலும் உதவிப் பொறியாளா்கள் 165 போ் தோ்வு செய்யப்பட்டனா். அதாவது, 98 போ் கட்டுமானப் பொறியியல் பிரிவுக்கும், 67 போ் மின் பொறியியல் பிரிவுக்கும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

வேளாண்மைத் துறைக்கு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலமாக 169 போ் வேளாண் அலுவலா்களாகவும், உதவி அலுவலா்களாகவும் தோ்வு செய்யப்பட்டனா். கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளா், ஆய்வக உதவியாளா், தட்டச்சா், காவலா் ஆகிய பணியிடங்களுக்கு 33 போ் நியமிக்கப்பட்டனா். அவா்கள் அனைவருக்கும் பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.

இந்த நிகழ்வில் அமைச்சா்கள் எ.வ.வேலு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்பட பலா் பங்கேற்றனா்.

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

பொதுவாக இன்றைய ஜனநாயகத்தில் இரண்டு கட்சிகள் ஆட்சிமுறை வலுவாக உள்ள நாடுகள் பல. மூன்றாவதாக ஒரு கட்சி, இரண்டில் ஒன்றை முறியடித்து வெற்றிபெறுவது முயல்கொம்புதான். மூன்றாவதாக கட்சி தொடங்குவோா் ஏற்கெனவே உள்... மேலும் பார்க்க

புதுமண தம்பதிகளுக்கு இலவச பட்டுவேட்டி, பட்டுச் சேலை: இபிஎஸ் வாக்குறுதி!

எதிர்வரும் 2026 பேரவைத்தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்தால், புதுமண தம்பதிகளுக்கு இலவச பட்டுவேட்டி, பட்டுச் சேலை வழங்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.மக்களை க... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணி கடைப்பிடிக்கும் ஒரே அரசியலமைப்பு, ஊழல் மட்டுமே - அண்ணாமலை

அமைச்சர்கள், முதல்வர்கள் பதவிப்பறிப்பு தொடர்பான மசோதாவுக்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திமுக உள்பட இந்தியா கூட்டணியை பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.இதுகுறித்து, அவர் தனது ... மேலும் பார்க்க

மக்களை ஏமாற்றும் சென்னை மாநகராட்சி - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சுண்ணாம்பு கொளத்தூரில் மின்வயர் கேபிள்கள் சரிசெய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி எடிட் செய்த புகைப்படம் வெளியிட்டதற்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.சென்னை மாநகராட்சி குறித்து ... மேலும் பார்க்க

எம்.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்பப்பதிவு நீட்டிப்பு!

எம்.எட். மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

மக்களாட்சியின் வேரிலேயே வெந்நீர் ஊற்றும் செயல்: பதவிநீக்க மசோதா குறித்து முதல்வர்!

முதல்வர்கள், அமைச்சர்கள் உள்ளிடோரை பதவியில் இருந்து நீக்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.அமைச்சர்கள், முதல்வர்கள், பிரதமர... மேலும் பார்க்க