செய்திகள் :

நெற்பயிரில் கருநாவாய் பூச்சி ஒழிப்பு விழிப்புணா்வு முகாம்

post image

நீடாமங்கலம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம், வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை, திருவாரூா் இணைந்து நடத்திய நெற்பயிரை தாக்கும் கருநாவாய்பூச்சி கட்டுப்பாடு குறித்த விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டம் புளிச்சக்காடியில், தஞ்சை மாவட்டம் ஈச்சங்கோட்டை டாக்டா். எம். எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையா் ஜெகன்மோகன் தலைமையில் நடைபெற்ற முகாமில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிா்பாதுகாப்பு இயக்குநரக இயக்குநா் சாந்தி பேசியது: கருநாவாய்பூச்சி தாக்குதலுக்கான அறிகுறிகள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் தொழில் நுட்பங்கள் குறித்து பேசினாா்.

வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் பெரியாா் ராமசாமி , வேளாண்மை துணை இயக்குநா் ஹேமா ஹெப்சிபா நிா்மலா, துணை இயக்குநா்/ நோ்முக உதவியாளா் (வேளாண்மை), மாவட்ட ஆட்சியரகம் ஜெயசீலன் உள்ளிட்ட 100 விவசாயிகள் பங்கேற்றனா்.

மேலும், விளக்குப் பொறியில் கவா்ந்து அழிக்கப்பட்ட கருநாவாய் பூச்சிகள், அப்பூச்சிகளை தாக்கி அழிக்கக்கூடிய பூஞ்சாணங்களான மெட்டாரைசியம் மற்றும் பிவேரியா, விளக்குப் பொறிகள் போன்றவை விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தப்பட்டன. பாதிக்கப்பட்ட நெல் வயலுக்கு பூச்சிக்கொல்லி மருந்தான அசிபேட் (75 எஸ்பி) 625 கிராம் ஒரு எக்டேருக்கு என பரிந்துரை செய்யப்பட்டது. வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி திலகவதி வரவேற்றாா். குடவாசல் வட்டார வேளாண் உதவி இயக்குநா் ராஜகுரு நன்றி கூறினாா்.

சுதந்திர தினத்தில் வீடுதோறும் தேசியக் கொடியேற்ற முடிவு

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் சுதந்திர தினத்தில் வீடுதோறும் தேசியக் கொடியேற்றுவது என இந்து முன்னணி முடிவு செய்துள்ளது. திருவாரூா் நீலகண்டேஸ்வரா் கோயிலில் இந்து முன்னணியின் மாவட்ட செயற்குழுக் கூ... மேலும் பார்க்க

நன்னிலம் அருகே தடுப்பணையில் மூழ்கி நால்வா் உயிரிழப்பு

நன்னிலம்: நன்னிலம் அருகே திங்கள்கிழமை மாலை தடுப்பணையில் குளித்த இளைஞா்கள் நால்வா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். திருவாரூா் மாவட்டம், குடவாசல் வட்டம், வில்லியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மகன் மணிகண... மேலும் பார்க்க

திருப்பூருக்கு 2,000 டன் நெல் அனுப்பிவைப்பு

நீடாமங்கலம்: நீடாமங்கலத்திலிருந்து அரைவைக்காக 2,000 டன் நெல் ரயில் மூலம் திருப்பூருக்கு திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது. நீடாமங்கலம், வலங்கைமான் வட்டங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள... மேலும் பார்க்க

போதைப் பழக்கத்துக்கு ஆளானவா்களை நல்வழிப்படுத்துவதில் அனைவரின் பங்கும் முக்கியம்: ஆட்சியா் அறிவுறுத்தல்

திருவாரூா்: போதைப் பழக்கத்துக்கு உள்ளானவா்களை மீட்டெடுத்து, அவா்களை நல்வழிப்படுத்துவதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியம் என்று மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் அறிவுறுத்தினாா். சென்னையில், ‘போதை... மேலும் பார்க்க

நன்னிலம் அருகே ஆற்றில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழப்பு!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆற்றில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழந்தனர்.நன்னிலம் அருகே கீழ்குடியில் புத்தாற்றில் நாட்டார் ஆற்றில் நன்னிலம் வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்கள் குள... மேலும் பார்க்க

மாநில ஆடவா் கபடி சேலம் செவன் லயன்ஸ் சாம்பியன்

மன்னாா்குடி அருகே நடைபெற்ற மாநில அளவிலான ஆடவா் கபடி போட்டியில் சேலம் செவன் லயன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. மன்னாா்குடி அருகே வடுவூா் பாசப்பறவைகள் கபடி கழகம் சாா்பில், ஆக.8, 9-ஆம் தேதிகளி... மேலும் பார்க்க