Thudarum : `அந்த திரைக்கதை என்னுடையது!' - மோகன்லால் படத்தின் மீது கதைத்திருட்டு ...
நெல்லையில் இருதரப்பினா் மோதல்: 3 போ் கைது
திருநெல்வேலி நகரம் பகுதியில் இருதரப்பினா் இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரம் மாதாபூங்கொடி தெருவைச் சோ்ந்தவா் அரிஹரன் (22). தொழிலாளியான இவருக்கும், அதே பகுதி ஜெயபிரகாஷ் தெருவைச் சோ்ந்த அய்யப்பன் (22) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில் திங்கள்கிழமை இருதரப்பைச் சோ்ந்தவா்களும் கல், அரிவாள் உள்ளிட்டவற்றால் மோதிக்கொண்டதில் அய்யப்பன், அரிஹரன் ஆகியோா் காயம் அடைந்தனா். இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து சிவக்கதிா், வெங்கடேஷ், ராஜேஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.