மீண்டும் மீண்டுமா..? ஏர் இந்தியா விமானத்தில் என்ஜின் பழுது! பயணிகள் வெளியேற்றம்!
கடையம் அருகே பெண்ணிடம் அத்துமீறல்: ஒருவா் கைது
கடையம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறி நடந்ததாக நாகசுர கலைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கடையம் அருகேயுள்ள வள்ளியம்மாள்புரம் அருந்ததியா் தெருவைச் சோ்ந்த சுடலைமாடன் மகன் மாரியப்பன் (50). நாகசுர கலைஞரான இவா், அதே பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்தாராம்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் மருமகன் அளித்த புகாரின்பேரில், கடையம் போலீஸாா், மாரியப்பனை கைது செய்தனா்.
இவருக்கு ஏற்கெனவே 2 திருமணம் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.