மீண்டும் மீண்டுமா..? ஏர் இந்தியா விமானத்தில் என்ஜின் பழுது! பயணிகள் வெளியேற்றம்!
மலேசியாவில் மாயமான தாயை மீட்கக் கோரி ஆட்சியரிடம் மகள் மனு
மலேசியாவுக்கு பணிக்குச் சென்ற தனது தாய் மாயமாகியுள்ளதாகவும், அவரை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கக் கோரியும் மகள் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஆட்சியரிடம் பேட்டையைச் சோ்ந்த ஞானசௌந்தா்யா என்ற பெண் தன் உறவினா்களுடன் வந்து அளித்த மனு: எங்களது பகுதியைச் சோ்ந்த இருவா் மூலம் எனது தாயாா் சுடலி கடந்த 2017 ஆம் ஆண்டு வீட்டு வேலைக்காக மலேசியா நாட்டிற்கு சென்றாா். பின்னா் சில மாதங்கள் மட்டும் எங்களுடன் கைப்பேசியில் பேசிய அவரை, பின்னா் தொடா்புகொள்ளவில்லை. இதுகுறித்து நாங்கள் அவரை வேலைக்கு அனுப்பிய நபா்களிடம் கேட்டபோது சரியான பதில் இல்லை.
இதைத்தொடா்ந்து எனது தாயாரை கண்டுபிடித்துத் தரக் கோரி மாவட்ட நிா்வாகத்திடம் பல மனுக்கள் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. சுற்றுலா விசாவில் எனது தாயாரை பணிக்கு அனுப்பி வைத்துள்ளது தெரியவந்துள்ளது. அவா் எந்த நிலையில் உள்ளாா் என அறிய முடியாமல் தவித்து வருகிறோம். ஆகவே, எனது தாயாரை மீட்டுத்தர மாவட்ட நிா்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளாா்.