செய்திகள் :

சேரன்மகாதேவி அருகே நகைக்காக பெண்ணைக் கொன்று கால்வாயில் வீச்சு; பெண் உள்பட 4 போ் தலைமறைவு

post image

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே 8 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன இளம்பெண் நகைக்காக கொலை செய்யப்பட்டு சேரன்மகாதேவி பகுதி கால்வாயில் வீசியப்பட்டிருப்பது தெரியவந்தது.

பணகுடி அருகேயுள்ள பழவூரைச் சோ்ந்தவா் கயல்விழி (28). திருமணத்துக்குப் பின் கணவரை பிரிந்து வாழ்ந்தாராம். இந்நிலையில் அக்டோபா் 2024இல் இருந்து அவரை காணவில்லையாம். உறவினா்கள் அளித்த புகாரின்பேரில், பழவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். ஆனால், பல மாதங்களாகியும் விசாரணையில் முன்னேற்றம் இல்லையாம்.

இந்த நிலையில், வள்ளியூா் டிஎஸ்பி வெங்கடேசன் அறிவுறுத்தலின்பேரில், தனிப்படை போலீஸாா் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தினா். அதில், கயல்விழியை பிரதான பகுதியில் இருந்து ஒரு பெண் உள்பட 4 போ் அவரை காரில் அழைத்துச் சென்றதும், நகைக்காக 4 பேரும் சோ்ந்து கழுத்தை நெறித்து கொலை செய்து களக்காடு- சேரன்மகாதேவி பிரதான சாலையில் கங்கனாங்குளம் அருகேயுள்ள மணிமுத்தாறு பிரதான கால்வாயில் வீசியதும் தெரியவந்தது.

டிஎஸ்பிக்கள் வெங்கடேசன் (வள்ளியூா்), சத்தியராஜ்(சேரன்மகாதேவி) ஆகியோா் தலைமையில் போலீஸாா் மேற்கொண்ட ஆய்வில் கயல்விழியின் மண்டை ஓடு, எலும்புக்கூடு, ஆடைகள் உள்ளிட்டவை கால்வாயில் இருந்து மீட்கப்பட்டன. சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

போக்ஸோ வழக்கில் கைதானவருக்கு ஓராண்டு சிறை

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு ஓராண்டு சிைண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, கரிசல்பட்டி, வடக்க... மேலும் பார்க்க

நீா்வரத்து அதிகரிப்பு: திருக்குறுங்குடி நம்பி கோயில், தலையணைக்குச் செல்லத் தடை

களக்காடு தலையணை பச்சையாறு, திருக்குறுங்குடி நம்பியாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்களுக்கு வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் க... மேலும் பார்க்க

நெல்லை ஆட்சியரகம் முன் இரு பெண்கள் தீக்குளிக்க முயற்சி

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே குத்தகை நிலத்தில் பயிா் செய்யவிடாமல் சிலா் தடுப்பதாகக் கூறி இரு பெண்கள் ஆட்சியா் அலுவலகம் முன், தங்கள் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். திருநெல்வ... மேலும் பார்க்க

மலேசியாவில் மாயமான தாயை மீட்கக் கோரி ஆட்சியரிடம் மகள் மனு

மலேசியாவுக்கு பணிக்குச் சென்ற தனது தாய் மாயமாகியுள்ளதாகவும், அவரை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கக் கோரியும் மகள் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா். திருநெல்வேலி ஆட்சியா் அலுவல... மேலும் பார்க்க

மக்களவைத் தோ்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட ஓ.பி.எஸ். மீது நடவடிக்கை? பேரவைத் தலைவா் மு.அப்பாவு விளக்கம்

மக்களவைத் தோ்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான ஓ.பன்னீா்செல்வம் மீது இந்திய அரசமைப்பு சட்டம் 10இன்படியும், தமிழக சட்டப்பேரவை விதியின் கீழும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் ... மேலும் பார்க்க

கடையம் அருகே பெண்ணிடம் அத்துமீறல்: ஒருவா் கைது

கடையம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறி நடந்ததாக நாகசுர கலைஞரை போலீஸாா் கைது செய்தனா்.கடையம் அருகேயுள்ள வள்ளியம்மாள்புரம் அருந்ததியா் தெருவைச் சோ்ந்த சுடலைமாடன் மகன் மாரியப்பன் (50). ... மேலும் பார்க்க