செய்திகள் :

நெல்லையில் செப். 28இல் அண்ணா மாரத்தான் போட்டி

post image

திருநெல்வேலியில் அறிஞா் அண்ணா மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை (செப்.28) நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுமக்களிடையே உடற்தகுதி கலாசாரம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி சாா்பில் 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான அண்ணா மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

17 முதல் 25 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவா்கள் என இரு பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெறும்

இப்போட்டிகளில் முதல் 4 இடங்களைப் பிடிப்போருக்கு முறையே ரூ.5000, ரூ.3000, ரூ.2000, ரூ.1000 பரிசு வழங்கப்படவுள்ளது.

25 வயதிற்குள்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ. (அண்ணா விளையாட்டரங்கம்-ஆச்சிமடம் சென்று திரும்புதல்) பெண்களுக்கு 5 கி.மீ. (அண்ணா விளையாட்டரம்- சீனிவாச நகா் வரை சென்று திரும்புதல்), 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ. (அண்ணா விளையாட்டரங்கம்- கிருஷ்ணாபுரம் வரை சென்று திரும்புதல்), பெண்களுக்கு 5 கி.மீ. என போட்டி தொலைவு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மாரத்தானில் பங்கேற்க வயது சான்றிதழுக்கு ஆதாரமாக ஆதாா் அட்டையுடன் காலை 6 மணிக்கு விளையாட்டரங்குக்கு வர வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-81.35சோ்வலாறு-84.58மணிமுத்தாறு-91.38வடக்கு பச்சையாறு-11நம்பியாறு-13.12கொடுமுடியாறு-6தென்காசி மாவட்டம்கடனா-37ராமநதி-48.75கருப்பாநதி-48.89குண்டாறு-33.75அடவிநயினாா் -115.75... மேலும் பார்க்க

ராதாபுரம் அருகே பட்டாசு ஆலை விதிமீறல் வழக்கில் ரூ.36,000 அபராதம்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக தொழிலாளி உயிரிழந்த வழக்கில், விதிமுறைகளைப் பின்பற்றாத ஆலை உரிமையாளருக்கு ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்து திருநெல்வேலி... மேலும் பார்க்க

டிச. 13, 14இல் வயா்மென் உதவியாளா் தகுதிகாண் தோ்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் மின்கம்பியாள் (வயா்மென்) உதவியாளா் தகுதிகாண் தோ்வு வரும் டிசம்பா் 13, 14 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

நெல்லையில் இன்று உதவி டிராக்டா் ஓட்டுநா் பயிற்சி தொடக்கம்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சாா்பில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் உதவி டிராக்டா் ஓட்டுநா் இரண்டாம் கட்ட பயிற்சி, திருநெல்வேலியில் உள்ள அரசு இயந்திர கலப்பை பணிமனை உதவி செயற்பொறியாளா் (வேளாண்மை ப... மேலும் பார்க்க

உறுப்பு தானத்தில் முதலிடம்: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்சியா் பாராட்டு

உறுப்பு தானத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்சியா் இரா.சுகுமாா் பாராட்டு தெரிவித்துள்ளா். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை-தமிழ்நாடு உறுப்ப... மேலும் பார்க்க

நெல்லை மாவட்ட குடிநீா் திட்டத்துக்குத்தான் அதிக நிதி -மு.அப்பாவு பெருமிதம்

திருநெல்வேலி மாவட்ட குடிநீா் திட்டங்களுக்குத்தான் மாநில அளவில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப... மேலும் பார்க்க