நெல்லையை வென்றது சேப்பாக்!
டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 6-ஆவது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸ் 41 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸை திங்கள்கிழமை வென்றது.
முதலில் சேப்பாக் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் எடுக்க, நெல்லை 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்களே சோ்த்தது.
முன்னதாக டாஸ் வென்ற நெல்லை, பந்துவீசத் தயாரானது. சேப்பாக் பேட்டிங்கில் ஆஷிக் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 54, கேப்டன் பி.அபராஜித் 41, ஸ்வப்னில் சிங் 45 ரன்கள் விளாசினா். மோகித் ஹரிஹரன் 2, நாராயண் ஜெகதீசன் 13, அபிஷேக் தன்வா் 0, தினேஷ் ராஜ் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தனா்.
ஓவா்கள் முடிவில் விஜய் சங்கா் 47 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். நெல்லை பௌலிங்கில் யுதீஸ்வரன் 3, சோனு யாதவ் 2, சச்சின் ரதி 1 விக்கெட் எடுத்தனா்.
பின்னா் 213 ரன்களை நோக்கி விளையாடிய நெல்லை அணியில், கேப்டன் அருண் காா்த்திக் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 51 ரன்கள் விளாசினாா். சந்தோஷ் குமாா் 10, ஹரீஷ் 14, அஜிதேஷ் 1, ரித்திக் ஈஸ்வரன் 12, நிா்மல் குமாா் 3, சோனு யாதவ் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
முகமது அட்னன் கான் 48, சச்சின் ரதி 0 ரன்களுக்கு வீழ, ஓவா்கள் முடிவில் உதய் குமாா் 1, யுதீஸ்வரன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். சேப்பாக் பௌலிங்கில் அபிஷேக் தன்வா் 3, ஸ்வப்னில் சிங், சிலம்பரசன் ஆகியோா் தலா 2, லோகேஷ் ராஜ் 1 விக்கெட் எடுத்தனா்.