செய்திகள் :

நெல்லை: வீடு புகுந்து மாணவிகள் மீது கொடூரமாக தாக்கிய ரவுடி கும்பல்; பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

post image

முன்பகை காரணமாக வீட்டுக்குள் நுழைந்த ரௌடி கும்பல் அங்கிருந்த பொருள்களை அடித்து உடைத்து வீசியதுடன், உருட்டுக்கட்டைகளால் சரமாரியாக தாக்கினார்கள். அதில் நான்கு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள சிவகாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்ராஜ். விவசாய கூலித் தொழிலாளியான அவர் நேற்று மதியம் தனது குடும்பத்தினருடன் வீட்டில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட கும்பல், பொன்ராஜ் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தது. கைகளில் கம்பு, கற்கள் போன்ற ஆயுதங்களுடன் நுழைந்த அந்தக் கும்பல், வீட்டில் இருந்த பொருள்களை அடித்து உடைத்து சூறையாடியது.

வீடு புகுந்து கொடூரமாக தாக்கிய ரவுடி கும்பல்
வீடு புகுந்து கொடூரமாக தாக்கிய ரவுடி கும்பல்

அதை பார்த்து அதிர்ச்சியுடனும் அச்சத்துடனும் இருந்த பொன்ராஜ் குடும்பத்தினர், அந்தக் கும்பலைத் தடுத்தனர். இதனால் கோபம் அடைந்த கும்பல், பள்ளி மாணவி ஜோதி, கல்லூரி மாணவியான டெல்சி உள்பட பொன்ராஜ் குடும்பத்தினர் 5 பேரையும் சரமாரியாகத் தாக்கினர்.

பின்னர் அனைவரையும் வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்த அந்தக் கும்பல், கம்பும் கற்களும் கொண்டு சரமாரியாகத் தாக்கியது. இந்தத் தாக்குதலில் பொன்ராஜ், திவ்யலட்சுமி, ஜெனிஷா, ஜோதி மற்றும் டெல்சி ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

கம்பால் அடித்தபோது கீழே விழுந்த பெண்களின் கால்களில் பாறைக் கற்களை தூக்கிப் போட்டுள்ளனர். இதில் சிறுமி உள்பட பெண்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

பொன்ராஜ் குடும்பத்தினரை 6 பேர் கொண்ட கும்பல் தெருவில் வைத்து சரமாரியாகத் தாக்கிய காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்த கொடூரக் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மாணவிகளுக்கு பலத்த காயம்
மாணவிகளுக்கு பலத்த காயம்

சம்பவம் நடந்த போது பொன்ராஜ் குடும்பத்தினருக்கு உதவ யாரும் வரவில்லை. அந்த கும்பல் சென்ற பின்னர் அங்கிருந்தவர்கள் வந்து அனைவரையும் மீட்டு, குமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்விரோதம் மற்றும் நிலத் தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் நடந்திருப்பதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக பணகுடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தாக்குதல் நடத்திய ஆனந்தராஜ் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பொன்ராஜ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது, அப்பகுதி மக்களிடம் காவல்துறை மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி கார் வெடிப்பு: `Hyundai i20 கார், CCTV கேமராக்கள் ஆய்வு' - அமித் ஷா பேட்டி

டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று (நவ 10) மாலை 6.50 ம... மேலும் பார்க்க

Delhi Car Blast: போலீஸ் கமிஷனருடன் அமித் ஷா பேச்சு; கார் வெடிப்பு குறித்து கெஜ்ரிவால் கவலை!

திங்கட்கிழமை (நவ. 10) மாலையில் டெல்லி செங்கோட்டை மெட்ரோ அருகே ஏற்பட்ட கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அருகாமையில் இருந்த வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.மெட்ரோ கேட் 1 அருகே கார... மேலும் பார்க்க

டெல்லி: செங்கோட்டை அருகே கார் வெடிப்பு; 8 பேர் பலி; நெஞ்சை உலுக்கும் வீடியோ - விசாரணை தீவிரம்!

டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்தால் அருகே இருந... மேலும் பார்க்க

தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு; பெண் டாக்டர் காரில் ஏ.கே.47 ரக துப்பாக்கி பறிமுதல் - பகீர் பின்னணி!

ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இரண்டு டாக்டர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் போலீஸார் டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசத்தில் ரெய்டு நடத்தினர். இதில் படித்து உயர் பதவியில் ... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: அனைத்து வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்த தவெக; 2 -ம் நாளாக சிபிஐ விசாரணை

ஆஜரான 12 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்கடந்த செப்டம்பர் 27-ம் தேதி த.வெ.க கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பா... மேலும் பார்க்க

டெல்லி: `பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் ஆயுதங்கள் சப்ளை; தாக்குதல் நடத்த சதி' - தீவிரவாதிகள் கைது

டெல்லி அருகே ஜம்மு காஷ்மீர் போலீஸார் ரெய்டு நடத்தி 350 கிலோ வெடிமருந்துகளையும், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யும் 20 ரிமோட்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோன்று ஹரியானாவில் உள்ள பரிதாபாத்தில் இதே போலீஸா... மேலும் பார்க்க