செய்திகள் :

நேபாளத்தில் முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொலை!

post image

போராட்டத்தால் சிதைந்து போன நேபாளத்தில் முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அணிதிரண்டு தலைநகர் காத்மாண்டுவில் திங்கள்கிழமை(செப். 8) பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், போராட்டம் கலவரமாக வெடித்தது.

கலவரத்தில் நேபாள முன்னாள் பிரதமர் ஜலாநாத் காநலின் மனைவி ராஜ்யலக்‌ஷ்மி சித்ராகர் செவ்வாய்க்கிழமை(செப். 9) உயிரிழந்தார். காத்மாண்டுவிலுள்ள டல்லு பகுதியில் அவர் வசித்து வந்த வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அதில் வீடு தீக்கிரையானது.

இந்தச் சூழலில், மிகுந்த சிரமத்துக்கிடையே உயிருடன் வெளியே மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜ்யலக்‌ஷ்மி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்தத் தகவலை அவர்தம் குடும்பத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Rajyalaxmi Chitrakar, the wife of Nepal's ex-prime minister Jhalanath Khanal, died on Tuesday after protesters, led by Gen Z, trapped her in their home and set the house on fire. 

காத்மாண்டு விமான நிலையம் மறுஅறிவிப்பின்றி மூடல்!

நேபாளத்தில் நிலவும் அசாதாரண சூழலைத் தொடர்ந்து, காத்மாண்டு சர்வதேச விமான நிலையம் மறுஅறிவிப்பு வரும்வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நேபாளத்தில் அரசுக்கு எதிராக வெடித்த கலவரத்தை தொடர்ந்து, உச்சநீதி... மேலும் பார்க்க

இந்திய - நேபாள எல்லையில் உச்சகட்ட கண்காணிப்பு! எல்லையில் நுழைய கட்டுப்பாடு

நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழல் மற்றும் அரசின் பிற நடவடிக்கைகள், சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகியவற்றுக்கு எதிராக கலவரம் மூண்டநிலையில், இந்திய எல்லைப் பகுதிகளில் உச்சகட்ட கண்காணிப்பு போடப்... மேலும் பார்க்க

நேபாள அதிபர் ராமசந்திர பௌடேல் ராஜிநாமா செய்யவில்லை: ராணுவம்

நேபாளத்தில் இளைஞா்களின் போராட்டம் தீவிரமடைந்து, கலவரமாக வெடித்ததைத்தொடா்ந்து பிரதமா் பதவியை கே.பி.சா்மா ஓலி ராஜிநாமா செய்த நிலையில், அதிபர் ராமசந்திர பௌடேல் ராஜிநாமா செய்யவில்லை என்று அந்நாட்டு ராணுவம... மேலும் பார்க்க

உணவகம் சென்ற டிரம்புக்கு சங்கடம்! நவீன கால ஹிட்லர் என மக்கள் கோஷம்!!

வெள்ளை மாளிகை அருகே உள்ள உணவகம் ஒன்றுக்கு, செவ்வாய்க்கிழமை இரவு, உணவருந்த சென்ற அமெரிக்க அதிபரைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் நவீன கால ஹிட்லர் என கோஷமெழுப்பியதால் சங்கடம் ஏற்பட்டது. மேலும் பார்க்க

நேபாளத்தில் ராணுவ ஆட்சி!

நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தை தொடர்ந்து அதிபர், பிரதமர் ராஜிநாமா செய்துள்ள நிலையில், ஆட்சி அதிகாரம் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.நேபாளத்தில் பிரதமர் கே.பி. சர்மா ஓலி அரசின் ஊழல... மேலும் பார்க்க

நேபாளத்தில் அமைதி திரும்பியதா?

நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தில் நாடு முழுவதும் பொதுச் சொத்துக்கள் சூறையாடப்பட்டதையடுத்து, நாட்டில் அமைதிக்கான முயற்சியை அந்நாட்டு ராணுவம் கையிலெடுத்துள்ளது.நேபாளத்தில் சமூக வலைதள செயலிகளுக்கு வி... மேலும் பார்க்க