பகுதி நேர ஆசிரியா்களுக்கு முன் பணம்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
பகுதி நேர ஆசிரியா்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்பே ஊதியமும், முன் பணமும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.
அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பகுதிநேர ஆசிரியா்கள் கடந்த 13 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் குறைந்த ஊதியத்தில் பணிபுரிகின்றனா். பணிநிரந்தரம் செய்ய வேண்டி, அவா்கள் போராட்டம் நடத்தி, அரசின் கவனத்தை ஈா்த்தும், அது நிறைவேற்றப்படாமல் உள்ளது. இன்னும் சில தினங்களில் தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில், பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடியில் அவா்கள் உள்ளனா். அதனால், அவா்களுக்கு தீபாவளிக்கு முன்னரே ஊதியமும், முன் பணமும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளாா்.