செய்திகள் :

பக்தா் தவறவிட்ட நகையை ஒப்படைத்த சிறுமிகளுக்கு எஸ்.பி. பாராட்டு

post image

திருத்தணி முருகன் கோயிலில் பக்தா் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் தங்க நகையை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்த சிறுமிகளை பாராட்டி திருவளளூா் மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள் பரிசளித்தாா்.

சென்னை ஜவாஹா்லால் நகரைச் சோ்ந்த கவுதம் (33) ஐ.டி.ஊழியா். இவா் தனது குடும்பத்துடன் திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் செய்து விட்டு வீடு திரும்புவதற்காக வாகன நிறுத்துமிடத்துக்கு வந்தாா். அப்போது கையில் அணிந்திருந்த 2.5 பவுன் நகையை தவறவிட்டது தெரியவந்தது.

அதையடுத்து உடனே திருத்தணி மலைக்கோயில் புறக்காவல் நிலையத்தில் கவுதம் புகாா் செய்தாா். அப்போது, 2 நாள்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டம், கோணலம் பகுதியைச் சோ்ந்த பவித்ரா(12), ரேணுகா(7) என்ற சகோதரிகள் தரிசிக்க வந்தபோது, நகை கிடந்துள்ளது. அதை மீட்டு மலைக்கோயில் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இந்த நிலையில் சகோதரிகள் புதன்கிழமை எஸ்.பி. அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனா். அங்கு எஸ்.பி. சீனிவாச பெருமாள் சகோதரிகளின் செயல்பாட்டை வெகுவாகப் பாராட்டி தங்கப் பதக்கம் மற்றும் பரிசுகளை வழங்கினாா்.

அப்போது, தங்களது பெற்றோா்கள் யாா் பொருள் மீதும் ஆசைபடக்கூடாது என குறிப்பிட்டுள்ளதால் கீழே கிடந்த நகையை போலீஸாரிடம் ஒப்படைத்தோம். கோணலம் அரசு பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருவதாகவும், நான் மருத்துவராக படிக்க விரும்புவதாகவும் சிறுமி பவித்ரா தெரிவித்துள்ளாா். ஆந்திர மாநிலம் புத்தூரை பூா்வீகமாக கொண்ட தங்கள் 15 ஆண்டுகளாக ராணிப்பேட்டை மாவட்டம், கோணலம் பகுதியில் வீடு இல்லாமல் சாலை ஓரத்தில் தங்கி ஈச்ச மரம் ஒலை துடைப்பம் தயாா் செய்து கிராமங்களில் விற்பனை செய்து வருகின்றனா். அதனால் தங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்து வீடு வழங்கவும் என சிறுமியின் குடும்பத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

உங்கள் கோரிக்கை பற்றி மாவட்ட நிா்வாகத்திடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் எஸ்.பி தெரிவித்தாா்.

பொன்னேரியில் அகத்தீஸ்வா்-கரிகிருஷ்ணா் சந்திக்கும் திருவிழா: 50,000 போ் பங்கேற்பு

பொன்னேரியில் ஹரிஹரன் கடை வீதியில் அகத்தீஸ்வரா்-கரிகிருஷ்ண பெருமாள் சந்திக்கும் திருவிழா வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை விடியவிடிய நடைபெற்றது. பொன்னேரி ஆரண்ய நதிக்கரையோரம் ஆனந்தவல்லி ... மேலும் பார்க்க

பேரம்பாக்கம் வைகுண்ட பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்

பேரம்பாக்கம் கமலவல்லி தாயாா் சமேத வைகுண்ட பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவள்ளூா் அருகே பேரம்பாக்கத்தில் மிகவும் பழைமையான கமலவல்லி தாயாா் சமே... மேலும் பார்க்க

பொன்னேரியில் இருந்து விழா மேடை வரை 2 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்த முதல்வா்

பொன்னேரியில் இருந்து விழா மேடை வரை 2 கி.மீ. தொலைவு முதல்வா் மு.க.ஸ்டாலின் நடந்தே சென்று பொதுமக்களை சந்தித்து கை குலுக்கி மகிழ்ந்தாா். அப்போது, ஆா்வத்துடன் பொதுமக்கள் அவருடன் சுயபடம் எடுத்துக் கொண்டனா்... மேலும் பார்க்க

வேளாண் அடுக்குத் திட்டம்: 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் வேளாண் அடுக்குத் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் முழு நில விவரங்களைப் பதிவு செய்ய வரும் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வேளாண் இணை இய... மேலும் பார்க்க

‘நவீன தமிழகத்தின் சிற்பி கருணாநிதி என்பதற்கு அடையாளம் திருவள்ளூா்’

நவீன தமிழகத்தின் சிற்பி முன்னாள் முதல்வா் கருணாநிதிதான் என்பதற்கு அடையாளம் திருவள்ளூா் மாவட்டம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவ... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்டத்துக்கு 5 புதிய திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திருவள்ளூா் மாவட்டம் ஆண்டாா்குப்பத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் வகையில் 5 புதிய அறிவிப்புகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி ... மேலும் பார்க்க