ஆயுள் காப்பீட்டின் கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரியாக சத் பால் பானு பொறுப்பேற்பு!
பக்திப் பாடலை வெளியிட்ட இளையராஜா பேரன்!
இசையமைப்பாளர் இளையராஜாவின் பேரன் பக்திப் பாடல் ஒன்றை இசையமைத்து வெளியிட்டுள்ளார்.
இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜாவின் மகனான யத்தீஸ்வர் ராஜாவும் இசைத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.
சினிமாவில் வாய்ப்பு தேடும் இவர் முதல் பாடலாக பக்திப் பாடல் ஒன்றை இசையமைத்து திருவண்ணாமலையில் இன்று வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய யத்தீஸ்வர், “எனக்கும் இசைமேல் ஆர்வம் அதிகம். முதல் பாடல் எப்போதும் கடவுளுக்காக இருக்க வேண்டும் என்பதற்காகப் பக்திப் பாடலை வெளியிட்டேன். இப்பாடலை உருவாக்கும் முன் தாத்தாவிடம் (இளையராஜா) ஆலோசனை கேட்டேன். அவர் எனக்கு சில விஷயங்களைச் சொன்னார்.
பின், அப்பா (கார்த்திக் ராஜா) பாடலின் வரிகளை கவனித்துக்கொண்டார். சினிமாவில் இசையமைக்க வேண்டும் என்பதே என் ஆசை. நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: அஜித்தை இயக்குவது யார்? பட்டியலில் பிரபல இயக்குநர்கள்!