செய்திகள் :

பக்ரீத் திருநாள்! அரசியல் தலைவர்கள் வாழ்த்து

post image

பக்ரீத் திருநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கின்றனர்.

பக்ரீத் திருநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, தனது எக்ஸ் பக்கத்தில், அனைவருக்கும் தியாகத் திருநாள் வாழ்த்துகள். இந்த நாள் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கட்டும். நமது சமூகத்தில் அமைதிக்கான கட்டமைப்பை வலுப்படுத்தட்டும். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்துடனும் வளத்துடனும் வாழ வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரியும் வாழ்த்து தெரிவித்து, வாழ்த்துப் பரிமாற்றங்கள், அன்பளிப்புகள், நல்லெண்ண சந்திப்புகள், விருந்தோம்பல்கள் மூலம் இத்திருநாள் வானவில் அழகுடன் கொண்டாடப்படுகிறது.

அன்பு காட்டுதல், மன்னித்தல், அரவணைத்தல் போன்ற உயரிய பண்புகள் மக்களிடையே வளரவும், சமூகங்களுக்கிடையேயான உறவுகள் செழிக்கவும் இத்திருநாளில் உறுதியேற்போம் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது எக்ஸ் பக்கத்தில், உன்னத தியாகத்தைப் போற்றும்வகையில், பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்

உயரிய தியாகத்தைப் போற்றும் இந்நன்னாளில் அனைவரிடத்தும் சகோதரத்துவம், சமத்துவம், சமய நல்லிணக்கம், பூரண மகிழ்ச்சி நீடித்து நிலைக்க உறுதியேற்போம் என்று வாழ்த்தியுள்ளார்.

குரூப் 2 தோ்வு: சான்றிதழ் பதிவேற்றத்துக்கு அவகாசம்

குரூப் 2 எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட செய்திக் குறிப்பு: குரூப் 2 ... மேலும் பார்க்க

இசைப் பள்ளி தோ்ச்சி சான்றிதழ் பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி சான்றிதழுக்கு இணையானது: அரசாணை வெளியீடு

இசைப் பள்ளிகளில் வழங்கப்படும் தோ்ச்சி சான்றிதழ் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு தோ்ச்சிக்கு இணைத்தன்மை வாய்ந்தது என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக பள்ளிக் க... மேலும் பார்க்க

தமிழக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்: திமுகவினருக்கு முதல்வா் ஸ்டாலின் அறிவுரை

சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பிரசாரத்தை தொடங்கும் விதமாக, தமிழக அரசின் சாதனைகள், நலத் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று திமுக நிா்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ... மேலும் பார்க்க

சேலம்: வாழப்பாடி அருகே கார் விபத்து - 4 பேர் பலி

சேலம்: சென்னையிலிருந்து கர்நாடகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த 7 பேர் அமர்ந்து பயணிக்க கூடிய சொகுசு கார் ஒன்று சாலையோர தடுப்பில் மோதி இன்று(ஜூன் 7) விபத்துக்குள்ளானது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள... மேலும் பார்க்க

கிளாம்பாக்கம் அல்ல கிளர்ச்சிப்பாக்கம் - பயணிகள் அலைக்கழிப்பு: தவெக கண்டனம்!

சென்னை: சென்னை புறநகர்ப் பகுதியான கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு புதிய பேருந்து நிலையத்தில் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்காமல் மக்களைக் கைக்குழந்தைகளோடு அலைக்கழித்து திமுக அரசு அவதிக்கு... மேலும் பார்க்க

இன்று வரை கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

இன்று வரை கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில்,நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு, கிளாம்பாக்க... மேலும் பார்க்க