செய்திகள் :

பங்குச்சந்தை நிலவரம்! சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு!

post image

நேற்று பங்குச்சந்தை சரிவடைந்த நிலையில் இன்று(பிப். 4) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
77,687.60 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

காலை 11.44 மணியளவில், சென்செக்ஸ் 611.50 புள்ளிகள் அதிகரித்து 77,798.24 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 179.70 புள்ளிகள் உயர்ந்து 23,540.75 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

சீனா, ,மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்காவின் வரி விதிப்பு அறிவிப்பால் நேற்று(பிப். 3) பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்த நிலையில் இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ், லார்சன் & டூப்ரோ, மஹிந்திரா & மஹிந்திரா, அதானி போர்ட்ஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி மற்றும் டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.

பவர் கிரிட், ஹிந்துஸ்தான் யூனிலீவர், நெஸ்லே மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

ஃபெடரல் ரிசா்வ் முடிவுக்கு முன்னதாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

மும்பை: ஃபெடரல் ரிசா்வ் முடிவுக்கு முன்னதாக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்ததாலும், தடையற்ற அந்நிய நிதி வெளியேற்றம் முதலீட்டாளர்களின் உணர்வை தொடர்ந்து பாதித்து வருவதாலும் பெஞ்ச்மார்க் குறியீடுகளான... மேலும் பார்க்க

சென்செக்ஸ் 201 புள்ளிகள் சரிவு!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று(பிப். 18) காலை 75,795.42 என்ற புள்ளிகளில் தொடங்கியது.காலை 9.30 மணியளவில், சென்செக்ஸ் 201.44 புள்ளிகள் குறைந்து 75,795.42 புள்ளிகளில் வர்த்தகமாகி வரு... மேலும் பார்க்க

ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிவு! ரூ. 86.87

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்றைய வணிக நேர முடிவில் 16 காசுகள் சரிந்து ரூ. 86.87 காசுகளாக நிறைவு பெற்றது. மேலும் பார்க்க

8 நாள்களுக்குப் பிறகு உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தை!

வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (பிப். 17) இந்திய பங்குச் சந்தை வணிகம் உயர்வுடன் முடிந்தது. மேலும் பார்க்க

தங்கம் விலை மீண்டும் உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை மீண்டும் உயர்ந்துள்ளது.கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 63,920-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமை அதிரடியாக... மேலும் பார்க்க

முன்பதிவு தொடக்க நாளில் 30,179 புக்கிங்கை பெற்ற மஹிந்திரா!

புதுதில்லி: மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ 6 ஆகிய இரண்டு புதிய மின்சார மாடல்களுக்கு 30,179 முன்பதிவுகளை பெற்றது.நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா, எக... மேலும் பார்க்க