செய்திகள் :

பங்குச்சந்தை நிலவரம்! சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு!

post image

நேற்று பங்குச்சந்தை சரிவடைந்த நிலையில் இன்று(பிப். 4) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
77,687.60 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

காலை 11.44 மணியளவில், சென்செக்ஸ் 611.50 புள்ளிகள் அதிகரித்து 77,798.24 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 179.70 புள்ளிகள் உயர்ந்து 23,540.75 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

சீனா, ,மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்காவின் வரி விதிப்பு அறிவிப்பால் நேற்று(பிப். 3) பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்த நிலையில் இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ், லார்சன் & டூப்ரோ, மஹிந்திரா & மஹிந்திரா, அதானி போர்ட்ஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி மற்றும் டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.

பவர் கிரிட், ஹிந்துஸ்தான் யூனிலீவர், நெஸ்லே மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

சரிவிலிருந்து மீண்ட ரூபாயின் மதிப்பு..!

மும்பை : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று(பிப். 4) காலை 13 காசுகள் உயர்ந்துள்ளது. வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கள்கிழமை(பிப். 3) ரூபாயின் மதிப்பு 87.11 என்ற நிலையை எட்டியது... மேலும் பார்க்க

கரடியின் ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

மும்பை: கனடா, மெக்ஸிகோ மற்றும் சீனா மீதான அமெரிக்க அதிபர் விதித்த கட்டணங்களால் உலகளாவிய வர்த்தகப் போர் குறித்த அச்சங்களை மீண்டும் எழும்பியதால், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று சரிந்து முடிந்தது.முதலீ... மேலும் பார்க்க

வரலாறு காணாத வகையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 87.29 ஆகக் குறைந்துள்ளது.டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் குறைந்து வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற ... மேலும் பார்க்க

கடும் சரிவில் பங்குச்சந்தை! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!

வாரத்தின் முதல் நாளான இன்று(பிப். 3) பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமானது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,063.94 என்ற புள்ளிகளில் தொடங்கியது.காலை 11.43 மணியளவில் சென்செக்ஸ் 5... மேலும் பார்க்க

ரூ. 2 முதல் 12 லட்சம் வரை: 2014 - 2025 மோடி அரசு செய்த தனிநபர் வரிவிலக்கு!

2025 - 26 மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமானவரி விலக்கு பெறுவதற்கான உச்சவரம்பு ரூ. 7 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது மாதம் ரூ. 1 லட்சம் அல்லது ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் வரை ஊதி... மேலும் பார்க்க

பட்ஜெட் தாக்கல்: ஏற்றத்துடன் நிறைவடைந்த பங்குச்சந்தை!

பங்குச்சந்தைகள் இன்று(பிப். 1) ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளன. 2025-26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று(பிப். 1) தாக்கல் செய்யப்படவிருப்பதால் பங்குச் சந்தை வணிகம் இன்று நடைபெற்றது.மும்பை பங்குச... மேலும் பார்க்க