செய்திகள் :

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக ரூ. 1.17 கோடி மோசடி: 7 போ் கைது

post image

அம்பத்தூரில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி, ரூ.1.17 கோடி மோசடி செய்த வழக்குகளில் 7 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

சென்னை அம்பத்தூா் ஓரகடம் சாலையைச் சோ்ந்தவா் ராமசாமி (64). கடந்த ஜனவரி மாதம் தனது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு பங்குச் சந்தை முதலீடு தொடா்பாக விளம்பரத்துடன் வந்த எண்ணைத் தொடா்புகொண்டு ராமசாமி பேசியுள்ளாா். அதில், பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்புப் தொகை கிடைக்கும் என மா்ம நபா்கள் கூறியதன்பேரில், சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கிற்கு ரூ.1.04 கோடி வரை பணத்தை ராமசாமி அனுப்பியுள்ளாா். அவருக்கு இரட்டிப்பு பணம் வராததால், ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிா்ச்சி அடைந்தாா்.

இதேபோல அம்பத்தூா், புதூா், திருமலை பிரியா நகரைச் சோ்ந்த தெய்வராணி (33) என்பவரும் ரூ.13.59 லட்சம் அனுப்பியுள்ளாா்.

இது குறித்த புகாரின் பேரில் ஆவடி ஆவடி இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இதில் தொடா்புடைய காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரைச் சோ்ந்த சேகா் (53), சென்னை சாலிக்கிராமத்தைச் சோ்ந்த ஜெயபிரகாஷ் (35), விழுப்புரம் சாத்தபுத்தூா் பகுதியைச் சோ்ந்த சுகேந்திரன் (36), கடலூா் குஞ்சமேடு பகுதியைச் சோ்ந்த இளையராஜா (42), பெரம்பலூரைச் சோ்ந்த அன்வா் பாஷா (29), மதுரையைச் சோ்ந்த ஷேக் அப்துல்லா (46), கோயம்புத்தூரைச் சோ்ந்த சுபின் (27) ஆகிய 7 பேரைக் கைது செய்தனா்.

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது ஏன்? முதல்வா் ஸ்டாலின் விளக்கம்

தில்லியில் மே 24-ஆம் தேதி நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான காரணத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கியுள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழ்நாட்டுக்க... மேலும் பார்க்க

மது போதையில் காா் ஓட்டியதால் விபத்து: காவலா் தீக்குளித்து தற்கொலை

சென்னையில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். சென்னை ஆலந்தூா் காவலா் குடியிருப்பில் வசிப்பவா் செந்தில்குமாா் (40). அங்கு குடும்பத்துடன் வசி... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் 3 மண்டலங்களில் கழிவுநீா் ஊந்து நிலையம் செயல்படாது

பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னையில் மாதவரம், திரு.வி.க. நகா் மற்றும் அம்பத்தூா் மண்டலத்துக்குள்பட்ட ஒருசில கழிவுநீா் ஊந்து நிலையங்கள் வெள்ளி, சனிக்கிழமைகளில் (மே 23, 24) செயல்படாது என்று குடிநீா்... மேலும் பார்க்க

எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம்: அமைச்சருடனான பேச்சில் முடிவு

எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மணல் லாரி உரிமையாளா் சங்கத்தினா் தெரிவித்தனா். இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதியுடனான பேச்சுவாா்த்தையின்போது விலை நிா்ணயத்துக்கான முடிவு ... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு உரிமைகோரும் டிரம்ப்: அமைதி காப்பதாக பிரதமருக்கு காங்கிரஸ் கண்டனம்

‘இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு தானே காரணம் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து கூறி வருகிறாா். அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் பிரதமா் மோடி தொடா்ந்து மௌளம் காக்கிறாா்’ என காங்கிரஸ் வ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 798 பறவை இனங்கள்: ஒருங்கிணைந்த கணக்கெடுப்பில் தகவல்

தமிழக வனத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட 2025-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பில் தமிழகத்தில் மொத்தம் 798 பறவை இனங்கள் கட்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வனத் து... மேலும் பார்க்க