செய்திகள் :

பங்குச் சந்தை சரிவுக்கு காரணம்? நிர்மலா சீதாராமன் விளக்கம்!

post image

லாபத்தை முன்பதிவு செய்யும் முதலீட்டாளர்களுக்கு இந்திய பங்குச் சந்தை நல்ல லாபத்தை அளித்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

லாபத்தில் உள்ள பங்குகளை விற்று முதலீட்டுடன் சேர்த்து லாபத்தை எடுத்ததே பங்குச்சந்தை சரிவுக்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

2024 அக்டோபரில் இருந்து தற்போது வரை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1.56 லட்சம் கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

2025-ல் இதுவரை (ஜனவரி, பிப்ரவரியில்) மட்டும் ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள பங்குகளை அந்நிய முதலீட்டாளர்கள் விற்றுள்ளனர்.

இதனிடையே இந்திய பங்குச் சந்தை சரிவுக்கான காரணம் குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், லாபத்தில் உள்ள பங்குகளை விற்று முதலீட்டுடன் சேர்த்து லாபத்தை எடுத்ததே பங்குச் சந்தை சரிவுக்கு காரணமாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் அதிக பங்குகளை விற்பனை செய்வது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், முதலீடுகள் நல்ல பலனைத் தரும் சூழல் இந்தியாவில் உள்ளதாகக் கூறினார்.

நிதித் துறை செயலாளர் துஹின் காந்தா பாண்டே பேசும்போது, உலக அளவில் பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கங்கள் நிகழ்ந்துவரும் நிலையில், பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கே திரும்புவதாகவும் அவர்கள் பெரும்பாலும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதிகமாக வளர்ந்துவரும் பொருளாதாரத்தில் இந்தியாவும் ஒன்று. அது மீண்டும் தொடரும் எனக் கூறினார்.

பணவீக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசின் விநியோக நடவடிக்கைகள், ரிசர்வ் வங்கியின் தேவை சார்ந்த முயற்சிகள் இணைந்து செயல்படுவதாகக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | 8 நாள்களுக்குப் பிறகு உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தை!

கொல்கத்தா- சென்னை விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா-சென்னை இடையே ஜல்பைகுரி-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இ... மேலும் பார்க்க

கர்நாடகத்திற்கு செல்லும் மகாராஷ்டிர அரசுப் பேருந்து சேவை நிறுத்தம்

பேருந்து தாக்கப்பட்டதையடுத்து, கர்நாடகத்திற்கு செல்லும் அரசுப் பேருந்து சேவையை மகாராஷ்டிரம் நிறுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த மகாராஷ்டிர அரசுப் பேருந்து, கர்நாடகத்தி... மேலும் பார்க்க

3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி பிப்ரவரி 23 முதல் 25 வரை மத்தியப் பிரதேசம், பிகார், அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பிப்ரவரி 23ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்திற்குச் செல்லு... மேலும் பார்க்க

சுரங்க விபத்து: ரேவந்த் ரெட்டியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

தெலங்கானா சுரங்க விபத்தில் மீட்புப் பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் கட... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் குடும்பத்துடன் புனித நீராடிய ஜெபி. நட்டா

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, தனது குடும்பத்துடன் சனிக்கிழமை புனித நீராடினார்.நட்டாவுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ... மேலும் பார்க்க

தேர்வெழுதவிருந்த மாணவர்கள் லாரி மோதி பலி

உத்தரப் பிரதேசத்தில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் பலியாகினர்.உத்தரப் பிரதேசத்தில் பல்ராம்பூரில் திங்கள்கிழமை (பிப். 24) அரசுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வு மையத்தின் இடத்தைச்... மேலும் பார்க்க