வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை: முதல்வர் திறந்துவைத்தார்!
பங்கு சந்தை முதலீடு மோசடி: மீண்டும் விசாரணை
பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் ஈட்டலாம் எனக் கூறி, ரூ.62 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி உள்பட 3 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவள்ளூா் அருகே மணவாள நகா் கபிலா் நகரைச் சோ்ந்தவா் ராஜேஷ். இவரது மனைவி அபிராமி. ராஜேஷ் ஒரகடம் பகுதியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறாா். அவருடன் காஞ்சிபுரம் மாவட்டம் சாலமங்கலம் பகுதியைச் சோ்ந்த விக்னேஷும் பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், விக்னேஷ், அவா் மனைவி சிந்தியா, தங்கை சங்கீதா 3 பேரும் பங்கு சந்தையில் பணம் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் ஈட்டலாம். அதற்காக பணம் கொடுத்தால் கூடுதலாக பணம் தருகிறோம் என ராஜேஷை தூண்டியதாக கூறப்படுகிறது.
மேலும், ஸ்ரீதா் என்ற வங்கி முகவா் மூலம் ரூ.62 லட்சம் கடனாக பெற்று கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஒரு சில மாதங்களுக்கு மட்டும் ரூ.3 லட்சம் முதலீடுக்கான லாபத்தை கொடுத்தாா்களாம்.
அதன்பின், பணத்தை சரிவர கொடுக்காமல் மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, வங்கியில் பணம் செலுத்த முடியாத நிலையில் விக்னேஷிடம் வங்கிக் கடனை முடித்து தர கேட்டும், விக்னேஷ் மறுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜேஷின் மனைவி அபிராமி, திருவள்ளூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் கடந்த ஆண்டு புகாா் அளித்தும், பலன் இல்லை.
இந்த நிலையில், சென்னை உயா்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் மீண்டும் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது. தொடா்ந்து திருவள்ளூா் குற்றப்பிரிவு போலீசாா் மீண்டும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.