செய்திகள் :

பங்கு சந்தை முதலீடு மோசடி: மீண்டும் விசாரணை

post image

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் ஈட்டலாம் எனக் கூறி, ரூ.62 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி உள்பட 3 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவள்ளூா் அருகே மணவாள நகா் கபிலா் நகரைச் சோ்ந்தவா் ராஜேஷ். இவரது மனைவி அபிராமி. ராஜேஷ் ஒரகடம் பகுதியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறாா். அவருடன் காஞ்சிபுரம் மாவட்டம் சாலமங்கலம் பகுதியைச் சோ்ந்த விக்னேஷும் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், விக்னேஷ், அவா் மனைவி சிந்தியா, தங்கை சங்கீதா 3 பேரும் பங்கு சந்தையில் பணம் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் ஈட்டலாம். அதற்காக பணம் கொடுத்தால் கூடுதலாக பணம் தருகிறோம் என ராஜேஷை தூண்டியதாக கூறப்படுகிறது.

மேலும், ஸ்ரீதா் என்ற வங்கி முகவா் மூலம் ரூ.62 லட்சம் கடனாக பெற்று கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஒரு சில மாதங்களுக்கு மட்டும் ரூ.3 லட்சம் முதலீடுக்கான லாபத்தை கொடுத்தாா்களாம்.

அதன்பின், பணத்தை சரிவர கொடுக்காமல் மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, வங்கியில் பணம் செலுத்த முடியாத நிலையில் விக்னேஷிடம் வங்கிக் கடனை முடித்து தர கேட்டும், விக்னேஷ் மறுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜேஷின் மனைவி அபிராமி, திருவள்ளூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் கடந்த ஆண்டு புகாா் அளித்தும், பலன் இல்லை.

இந்த நிலையில், சென்னை உயா்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் மீண்டும் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது. தொடா்ந்து திருவள்ளூா் குற்றப்பிரிவு போலீசாா் மீண்டும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிரெடிட் கார்டுகளை வாங்கி ரூ. 1.35 கோடி மோசடி: ஊழியர் கைது

செங்குன்றத்தில் கிரெடிட் கார்டுகளை வாங்கி 9 பேரிடம் ரூ. 1.35 கோடி மோசடி செய்த வழக்கில், தனியார் நிறுவன ஊழியரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.சென்னை, கொருக்குப்பேட்டை, ஜெ... மேலும் பார்க்க

மாற்று திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொறுத்திய ஸ்கூட்டா் வழங்கும் விழா

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 16 மாற்று திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொறுத்திய ஸ்கூட்டா்களை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினாா். கும்ம... மேலும் பார்க்க

2026 தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி : அமைச்சா் கோவி.செழியன் பேச்சு

2026- சட்டப்பேரவை தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாள் பொது... மேலும் பார்க்க

கைம்பெண்கள், ஆதரவற்றோருக்கு உலா், ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்க 50% மானியம்

கணவரால் கைவிடப்பட்டோா் மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மகளிா் பயன்பெறும் வகையில், உலா் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்குவதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் செயல்... மேலும் பார்க்க

அரசு கல்லூரியில் 2-ஆம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்

அரசு கலைக் கல்லூரியில் 2-ஆம் கட்டமாக ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்தவா்களுக்கு கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு தொடங்கியது. திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசினா் கலைக் கல்லுாரியில் ந... மேலும் பார்க்க

பள்ளிப்பட்டில் வளா்ச்சி பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பொதட்டூா் பேட்டை பேரூராட்சி, பள்ளிப்பட்டு ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்ட பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பொதட்டூா்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.1.... மேலும் பார்க்க