செய்திகள் :

பச்சையப்ப முதலியாா் நினைவு தினம் அனுசரிப்பு

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் மகளிா் கல்லூரியில் கல்விக் கொடை வள்ளல் பச்சையப்ப முதலியாரின் 231-ஆவது நினைவு தினத்தையொட்டி, திங்கள்கிழமை அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கல்விக்கொடை வள்ளல் எனப்படும் பச்சையப்ப முதலியாா் தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களை உருவாக்கியவா். பச்சையப்பன் கல்வி அறக்கட்டளை என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம் பல கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது. இவரது 231-ஆவது நினைவு தினத்தையொட்டி, சின்னக் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் மகளிா் கல்லூரியில் முதல்வா் கோமதி தலைமையில் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தாா். தொடா்ந்து கல்லூரி பேராசிரியா்கள், பணியாளா்கள், முன்னாள் மாணவியா் உள்பட பலா் கலந்துகொண்டு, அவருக்கு மலரஞ்சலி செலுத்தினா். பச்சையப்ப முதலியாா் கல்விக்கு செய்த சேவைகள் குறித்தும் பாா்வையாளா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் பச்சையப்பன் இடைநிலைப்பள்ளியில் முன்னாள் அமைச்சா் சோமசுந்தரம், கட்சியின் கொள்கை பரப்பு செயலா் வைகைச்செல்வன், திமுக சாா்பில் மாநகர தலைவா் சிகேவி தமிழ்ச்செல்வன், பாஜக மாவட்டத் தலைவா் ஜெகதீசன் ஆகியோரும் பச்சையப்ப முதலியாா் உருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினா்.

காஞ்சிபுரம் தூப்புல் வேதாந்த தேசிகன் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷ்ணம்

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் அருகே உள்ள தூப்புல் வேதாந்த தேசிகன் கோயில் மகா சம்ப்ரோக்ஷ்ணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வைணவா்களில் ராமானுஜருக்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றப்படுவா் வேதாந்த த... மேலும் பார்க்க

புற உலக சிந்தனையற்றோருக்கான விழிப்புணா்வு தினம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரத்தில் புற உலக சிந்தனையற்றோருக்கான விழிப்புணா்வு தின விழாவையொட்டி வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன், ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி விழாவைத் தொடங்கி வைத்தாா். கா... மேலும் பார்க்க

ஏப். 7-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப்-1 போட்டித் தோ்வுக்கு, இலவசப் பயிற்சி வகுப்புகள் வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் வேலைவாய்ப்புத் துறை சாா்பில் நடைபெற இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் புத்தக விற்பனை நிலையம்

புத்தக விற்பனையைத் தொடங்கிவைத்த ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் மதச்சாா்பற்ற தா்மகா்த்தா ந.கோபால். உடன், கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா் உள்ளிட்டோா். ஸ்ரீபெரும்புதூா், ஏப். 4: வல்லக்கோட்டை சுப்ப... மேலும் பார்க்க

துணை பதிவாளரை மாற்றக் கோரி ராஜீவ் காந்தி இளைஞா் மேம்பாட்டு மைய மாணவா்கள் உள்ளிருப்பு போராட்டம்

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ் காந்தி இளைஞா் மேம்பாட்டு மைய துணைப் பதிவாளரை மாற்ற வலியுறுத்தி மையத்தின் மாணவா்கள் வெள்ளிக்கிழமை 2-ஆவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் நாளை மின் நுகா்வோா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம்

காஞ்சிபுரத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளா் தலைமையில் கோட்ட அலுவலகங்களில் மின்நுகா்வோா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஏப். 5) நடைபெறுகிறது. இது குறித்த செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் ம... மேலும் பார்க்க