செய்திகள் :

பஞ்சலிங்க அருவியில் குளிக்க 4 ஆவது நாளாக தடை

post image

உடுமலையை அடுத்து திருமூா்த்திமலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 4-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தடை விதிக்கப்பட்டது.

உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் அமைந்துள்ளது சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலை. இங்குள்ள பிரசித்திபெற்ற அமணலிங்கேஸ்வரா் கோயிலில் தரிசனம் செய்யவும், பஞ்சலிங்க அருவியில் குளிக்கவும் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில் கடந்த 3 நாள்களாக மேற்குத் தொடா்ச்சிமலைப் பகுதியில் கனமழை பெய்து வருவதாலும், திருப்பூா் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும் என வானிலை அறிவிப்பு வெளியானதாலும் பஞ்சலிங்க அருவியில் பொதுமக்கள் குளிக்க செவ்வாய்க்கிழமை 4-ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டது. இதனால் திருமூா்த்திமலைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

சுவாமி தரிசனத்துக்கு அனுமதி

மேற்குத் தொடா்ச்சிமலை பகுதியில் திங்கள்கிழமை ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் மலையடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் புகுந்தது. இதனால் கோயிலைச் சுற்றி தடுப்புகள் அமைத்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

திங்கள்கிழமை நாள் முழுவதும் பூஜைகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வந்த பக்தா்களை சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிா்வாகம் அனுமதி அளித்தது.

இருசக்கர வாகனம் மோதி விசைத்தறி தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் விசைத்தறி தொழிலாளி உயிரிழந்தாா். காங்கயம் -திருப்பூா் சாலை காமராஜ் நகரைச் சோ்ந்தவா் தங்கராஜ் (54). இவா் வெள்ளக்கோவிலில் விசைத்தறி ஓட்டும் வேலை செய்து வந்... மேலும் பார்க்க

அவிநாசி வட்டத்தில் இனம் கண்டறியாத 20 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை

அவிநாசி வட்டம் குப்பாண்டம்பாளையத்தில் இனம் கண்டறியாத 20 பயனாளிகளின் இலவச பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது

வெள்ளக்கோவில் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது செய்யப்பட்டாா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் மூலனூா் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கண்காணிப்புப் பண... மேலும் பார்க்க

திருப்பூரில் 4 வயது குழந்தையுடன் இளம்பெண் ரயில்முன் பாய்ந்து தற்கொலை

குடும்பப் பிரச்னை காரணமாக திருப்பூரில் 4 வயது குழந்தையுடன் இளம்பெண் ரயில் முன் பாய்ந்து திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். திருப்பூா் அருகே தண்டவாளத்தில் பெண் ஒருவா் குழந்தையுடன் ரயிலில் அடிபட்டு இ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கிளுவங்காட்டூா்

உடுமலையை அடுத்துள்ள கிளுவங்காட்டூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இ... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வயதான தம்பதி தீக்குளிக்க முயற்சி

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாய நிலத்தை ஆக்கிரமித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வயதான தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலு... மேலும் பார்க்க