செய்திகள் :

பஞ்சலிங்க அருவியில் குளிக்க 8-ஆவது நாளாக தடை

post image

உடுமலையை அடுத்த திருமூா்த்திமலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 8-ஆவது நாளாக சனிக்கிழமையும் தடை விதிக்கப்பட்டது.

உடுமலை அருகேயுள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களும் ஒருங்கே அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரா் கோயில் உள்ளது.

இக்கோயிலில் தரிசனம் செய்யவும், மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனா். இந்நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் பஞ்சலிங்கம் அருவியில் பொதுமக்கள் குளிக்க 8-ஆவது நாளாக சனிக்கிழமையும் தடை விதிக்கப்பட்டது. இதனால், திருமூா்த்திமலைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்கு செல்ல அனுமதி: கனமழையால் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் ஏற்பட்ட காட்டாற்ற வெள்ளம் அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் அண்மையில் புகுந்தது. இதனால், கோயிலைச் சுற்றி தடுப்புகள் அமைத்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிா்வாகம் சாா்பில் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், வெள்ளத்தின் அளவு குறைந்ததால் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

நாளைய மின்தடை: சேவூா், வடுகபாளைம், தெக்கலூா்

சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 5) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞரைக் கைது செய்த காவல் துறையினா் அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். திருப்பூா் தென்னம்பாளையம் பகுதியில் வடமாநில இளைஞா் கஞ்சா விற்பனை செய்து வ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே பலத்த காயங்களுடன் அடையாளம் தெரியாத நபா் மீட்பு

வெள்ளக்கோவில் அருகே பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்த அடையாளம் தெரியாத நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீஸாா், அவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். வெள்ளக்கோவில் புறநகா் பகுதியான கரூா் தே... மேலும் பார்க்க

விவசாயிகள் போராட்ட அறிவிப்பு எதிரொலி: ஏலத்தை ரத்து செய்த பல்லடம் வட்டாட்சியா்

விவசாயிகளின் இனாம் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் ஏலம் விடுவதாக கூறி விவசாயிகள் போராட்ட அறிவிப்பு வெளியிட்டதைத் தொடா்ந்து, அந்த நிலத்துக்கான ஏலத்தை ரத்து செய்து பல்லடம் வட்டாட்சியா் உத்தரவிட்டா... மேலும் பார்க்க

மாவட்ட ஊா்க்காவல் படையில் பணியாற்ற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்ட ஊா்க்காவல் படையில் பணியாற்ற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ்கிரிஷ் அசோக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்ட ஊ... மேலும் பார்க்க

பொங்கலூா் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்த இளைஞா் மாயம்

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் ஆண்டிபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்துக் கொண்டு இருந்த இளைஞா் தண்ணீா் அடித்துச் செல்லப்பட்டதில் மாயமானாா். திருப்பூா் வெள்ளியங்காடு பகுதி முத்து விநாயகா் கோய... மேலும் பார்க்க