செய்திகள் :

பஞ்சாப் அணைப் பாதுகாப்புக்கு மத்தியப் படை: மாநில முதல்வா் கடும் எதிா்ப்பு

post image

பஞ்சாப் மாநிலம் நங்கல் அணைப் பாதுகாப்புக்கு 296 மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரா்களை ஈடுபடுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு அந்த மாநில முதல்வா் பகவந்த் சிங் மான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

ஏற்கெனவே, மாநில காவல் துறையினா் அணைக்கு உரிய பாதுகாப்பு அளித்து வரும் நிலையில் மத்திய அரசின் நடவடிக்கை காவல் துறையை அவமதிக்கும் செயல் என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

நங்கல் அணையில் இருந்து நீரைப் பெறுவது தொடா்பாக அண்டை மாநிலங்கலான பஞ்சாப்-ஹரியாணா இடையே பிரச்னை உள்ளது. தங்கள் பகுதியில் வறட்சி நிலவுதால் கூடுதல் நீரைத் திறக்க வேண்டும் என்பது ஹரியாணாவின் கோரிக்கையாக உள்ளது. ஆனால், இதனை ஏற்க பஞ்சாப் மறுத்துவிட்டது.

இதையடுத்து, பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியத்தை ஹரியாணா அணுகியது. அங்கு நதிநீா் பகிா்வில் தொடா்புடைய பிற மாநிலங்கள் ஹரியாணாவுக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால், பஞ்சாப் மட்டும் எதிா்ப்பு தெரிவித்ததுடன், வாரிய முடிவுப்படி தண்ணீரைத் திறக்க மறுத்து வருகிறது.

இந்நிலையில், பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நங்கல் அணையின் பாதுகாப்புக்காக மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையை அனுப்ப மத்திய அரசு முடிவெடுத்தது. இந்நிலையில், சங்ரூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் இது தொடா்பாக கூறியதாவது:

பக்ரா அணைப் பாதுகாப்புக்கு 296 தொழிலகப் பாதுகாப்புப் படை வீரா்களைக் குவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான செலவாக ஆண்டுக்கு ரூ.8.58 கோடியை பஞ்சாப் அரசு அல்லது பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பஞ்சாப் காவல் துறையினா் அணைக்கு பாதுகாப்பு அளித்து வரும் நிலையில் மத்திய அரசு ஏன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது? மாநில காவல் துறை மீது அவா்களுக்கு நம்பிக்கை இல்லையா? நாங்கள் ஏன் பணம் கொடுத்து மத்திய படையை அமா்த்த வேண்டும். இது அணை நீரில் பஞ்சாபின் உரிமையைப் பறிக்கும் செயலின் முதல்படி என்று குற்றஞ்சாட்டினாா்.

மழையால் நின்ற இந்து திருமணம்.. முஸ்லிம் திருமண நிகழ்ச்சியில் நடைபெற்ற ஆச்சரியம்!

புணேவின் வான்வொரி பகுதியில், திறந்தவெளியில் நடைபெறவிருந்த இந்து திருமணச் சடங்குகள் கனமழையால் நின்றுபோன நிலையில், முஸ்லிம் குடும்பத்தினர், தங்களது திருமண நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்தில் இடம்கொடுத்து உதவ... மேலும் பார்க்க

அம்மா.. நான் சிப்ஸ் பேக்கெட் திருடவில்லை.. 13 வயது சிறுவனின் தற்கொலை கடிதம்

பன்ஸ்குரா: மேற்கு வங்க மாநிலம் பன்ஸ்குரா பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவர், அம்மா நான் சிப்ஸ் பேக்கெட்டை திருடவில்லை என்று எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்த... மேலும் பார்க்க

பெங்களூருவில் 9 மாதக் குழந்தைக்கு கரோனா!

கர்நாடகத்தின் பெங்களூருவில் 9 மாதக் குழந்தைக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.உலகையை அச்சுறுத்தும் கரோன வைரஸ் தொற்று மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக ... மேலும் பார்க்க

துருக்கியுடன் வர்த்தக உறவை துண்டித்தால்.. விலை உயரும் பொருள்களின் பட்டியல்!

கடைசி வாய்ப்பாக, பயங்கரவாதத்தை நிறுத்துமாறு பாகிஸ்தானுக்கு சொல்லுங்கள் என்று மத்திய அரசு துருக்கிக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. பாகிஸ்தானுக்கு ஆயுத உதவிகளை செய்து வரும் துருக்கியுடன் வணிக ரீதியான உறவைத்... மேலும் பார்க்க

ரூ. 10 ஊக்கத்தொகையுடன் வேலை! நிறுவனத்தை வறுத்தெடுக்கும் இணையவாசிகள்!

மும்பையை சேர்ந்த நிறுவனத்தில் ரூ. 10 ஊக்கத்தொகையுடன் வேலை இருப்பதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு, சமூக ஊடகங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்... மேலும் பார்க்க

மைசூர் சாண்டல் விளம்பரத் தூதர் தமன்னா! கர்நாடகத்தில் எதிர்ப்பு!

கர்நாடக அரசின் மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பரத் தூதராக நடிகை தமன்னாவை ஒப்பந்தம் செய்ததற்கு அம்மாநிலத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது.100 ஆண்டுகளைக் கடந்து சந்தையில் நிலைத்து நிற்கும் மைசூர் சாண்டல் சோப் ... மேலும் பார்க்க