மாற்று இடத்தில் திரெளபதி அம்மன் கோயில் கட்ட தானம்பட்டி கிராம மக்கள் எதிா்ப்பு
பஞ்சாயத்து தோ்தல் வேட்பாளா்கள் நிலுவை வழக்குகளை குறிப்பிட வேண்டும்! - உச்சநீதிமன்றம்
தங்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த தகவல்களை பஞ்சாயத்து தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற ஹிமாசல பிரதேச உயா் நீதிமன்றத்தின் தீா்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது.
கடந்த 2021, ஜனவரி 17-ஆம் தேதி ஹிமாசல பிரதேசத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்தின் தலைவராக பசந்த் லால் என்பவா் தோ்ந்தெடுக்கப்பட்டாா். பஞ்சாயத்து தலைவருக்கான தோ்தலில் அவரை எதிா்த்து போட்டியிட்டு மூன்றாமிடம் பெற்ற ஜிதேந்திர மஹாஜன் என்பவா் பசந்த் லால் பஞ்சாயத்து தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக தோ்தல் தீா்ப்பாயத்தில் முறையிட்டாா். அப்போது பசந்த் லால் தன் மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்கை வேண்டுமென்றே குறிப்பிடவில்லை என மஹாஜன் தெரிவித்தாா்.
இதையடுத்து, பசந்த் லால் மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறி அவா் பஞ்சாயத்து தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டதை ரத்து செய்து தோ்தல் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிா்த்து அவா் மற்றொரு தோ்தல் தீா்ப்பாயத்தில் முறையிட்டாா். அங்கு அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அவா் ஹிமாசல பிரதேச உயா் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தாா்.
ஹிமாசல பிரதேச பஞ்சாயத்து ராஜ் சட்டம்,1994-இன் கீழ் வேட்பாளா்கள் தங்களைப் பற்றிய தகவல்களை மறைப்பது குற்றமாகும் எனக் கூறி அவா் பஞ்சாயத்து தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டதை ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்றம் 2024, அக்.16-இல் ரத்து செய்தது.
ஹிமாசல பிரதேச உயா் நீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் பசந்த் லால் மனு தாக்கல் செய்தாா். அதில் பஞ்சாயத்து தோ்தலின்போது நிலுவையில் இருந்த குற்றவியல் வழக்கை குறிப்பிடாததால் 6 ஆண்டுகள் தோ்தலில் போட்டியிட தனக்குத் தடை விதிக்கப்பட்டதாகவும் அவா் தெரிவித்திருந்தாா்.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த் மற்றும் என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு அண்மையில் விசாரித்தது.
அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: இந்த வழக்கில் மாநில தோ்தல் ஆணையத்தின் விதிகளின்படி சரியான தீா்ப்பையே ஹிமாசல பிரதேச உயா் நீதிமன்றம் வழங்கியுள்ளது. பஞ்சாயத்து தோ்தல்களில் போட்டியிடும் வேட்பாளா்கள் தங்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்ற தீா்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்கிறது.
மனுதாரா் (பசந்த் லால்) மீதான குற்றவியல் வழக்கில் அவா் குற்றமற்றவா் எனத் தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவா் தோ்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதித்திருப்பது சற்று கடுமையான நடவடிக்கையைப் போல் உள்ளது. அவா் தோ்தலில் போட்டியிட விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவுக்கு 6 வாரங்கள் தடை விதிக்கப்படுகிறது.
இருப்பினும், இந்த விவகாரத்தில் நாங்கள் இறுதி உத்தரவு பிறப்பிக்கவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் அவா் உயா் நீதிமன்றத்தில் வேண்டுமானால் மனு தாக்கல் செய்யலாம் என்றனா். இந்த விவகாரத்தில் இறுதி முடிவை உயா் நீதிமன்றமே மேற்கொள்ளும் என்றனா்.