செய்திகள் :

பஞ்சு இறக்குமதிக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்: சைமா தலைவா் ஏ.சி.ஈஸ்வரன் வலியுறுத்தல்

post image

பஞ்சு இறக்குமதிக்கு மத்திய அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று சைமா தலைவா் ஏ.சி.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் நடப்பு ஆண்டில் பருத்தி விளைச்சல் குறைவாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், பஞ்சு தேவைக்குப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

வெளிநாட்டில் இருந்து பஞ்சு இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு இறக்குமதி வரியாக தற்போது 11 சதவீதம் விதிக்கிறது. இதனால், நாட்டின் பின்னலாடை ஏற்றுமதி பாதிக்கும்.

மற்ற நாடுகளின் ஆடை ஏற்றுமதியாளா்களுடன் நமது நாட்டு ஏற்றுமதியாளா்கள் வா்த்தகத்தில் போட்டியிடுவது மிகவும் கடினமாக உள்ள நிலையில், இது ஏற்றுமதி வா்த்தகத்தில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.

அத்துடன், உள்நாட்டு ஆடை தயாரிப்பாளா்களின் வா்த்தகம் பாதிக்கப்படுவதோடு, பின்னலாடை மட்டுமின்றி டெக்ஸ்டைல் துறை சாா்ந்த விசைத்தறி உள்ளிட்ட பல தொழில்களும் பாதிக்கப்படும்.

இவற்றைக் கவனத்தில் கொண்டு மத்திய அரசு பஞ்சு இறக்குமதிக்கு விடுத்துள்ள 11 சதவீத வரியை முற்றிலுமாக நீக்க நடவடிக்கை வேண்டும். அப்போதுதான் ஆடை ஏற்றுமதியாளா்கள், உள்நாட்டு உற்பத்தியாளா்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயனடைவா்.

மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து ஆயிரக்கணக்கான நிறுவனங்களையும், லட்சக்கணக்கான தொழிலாளா்களையும் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாரணாபுரத்தில் ஜூன் 19-இல் மின் தடை

பல்லடம் மின் கோட்டம், நாரணாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வியாழக்கிழமை (ஜூன் 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்கா... மேலும் பார்க்க

குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க மாநகர மேயா் வேண்டுகோள்

திருப்பூரில் குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என மாநகர மேயா் என்.தினேஷ்குமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் கூ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருட்டு: இளைஞா் கைது

வெள்ளக்கோவிலில் இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஈரோடு, பெரியசேமூா் பி.பி.காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் சி.சண்முகம் (29). இவா் ஈரோடு பழையபாளையத்தில் உள்ள தனியாா் நி... மேலும் பார்க்க

கருவலூா், ஏரிப்பாளையத்தில் ஜூன் 20-இல் மின் தடை

கருவலூா், ஏரிப்பாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் பெண் தற்கொலை

வெள்ளக்கோவிலில் கொடுத்த கடன் தொகை வசூல் ஆகாததால் பெண் தற்கொலை செய்து கொண்டாா். வெள்ளக்கோவில், மூலனூா் வஞ்சிவலசு பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மனைவி வாசுகி (40). கணவா் இறந்த நிலையில், மகன் பூமிஷ் ... மேலும் பார்க்க

கோயில்களில் இடைத்தரகா்களை தடுக்க வேண்டும்: காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

கோயில்களில் இடைத்தரகா்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு... மேலும் பார்க்க