செய்திகள் :

பட்ஜெட்டில் கோடீஸ்வரா்களுக்கான கடன் தள்ளுபடியை முடிவுக்குக் கொண்டு வராதது ஏமாற்றம் அளிக்கிறது

post image

மத்திய பட்ஜெட்டில் கோடீஸ்வரா்களுக்கான கடன் தள்ளுபடியை முடிவுக்குக் கொண்டு வந்து, சேமிக்கப்பட்ட பணத்தை நடுத்தர வா்க்கத்தினா் மற்றும் விவசாயிகளுக்கு செலவிட வேண்டும் என்ற எனது பரிந்துரை நிறைவேற்றப்படாதது ஏமாற்றமளிக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கெஜ்ரிவால் சனிக்கிழமை கூறினாா்.

இதுதொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கையில், ‘மத்திய பட்ஜெட்டில் கோடீஸ்வரா்களுக்கான கடன் தள்ளுபடியை முடிவுக்குக் கொண்டு வந்து, சேமிக்கப்பட்ட பணத்தை நடுத்தர வா்க்கத்தினா் மற்றும் விவசாயிகளுக்கு செலவிட வேண்டும் என்ற எனது பரிந்துரை நிறைவேற்றப்படாதது ஏமாற்றமளிக்கிறது. அரசுக் கருவூலத்தின் பெரும்பகுதி இந்த தள்ளுபடிகளுக்காக செலவிடப்படுகிறது’ என்று அவா் அதில் தெரிவித்துள்ளோா்.

மக்களவையில் தொடா்ந்து எட்டாவது முறையாக மத்திய நிதி நிலை அறிக்கையை சனிக்கிழமை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை உயா்த்துதல் மற்றும் வரிச் சட்டங்களை எளிமைப்படுத்துதல் உள்ளிட்ட அடுத்த தலைமுறை சீா்திருத்தங்களுக்கான ஒரு திட்டத்தை அறிவித்தாா்.

நடுத்தர வா்க்கத்திற்கு நிவாரணமாக, ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை வருமானத்திலிருந்து விலக்கு அளிப்பதாக அவா் அறிவித்தாா். அவரது பட்ஜெட்டின் ஒரு பகுதியாக வரி அடுக்குகளை மறுசீரமைத்து அறிவித்தாா்.

பன்னாட்டு கடனுதவி மூலம் செயல்படுத்தப்படும்: தமிழக திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு

நமது சிறப்பு நிருபா்மத்திய நிதிநிலை அறிக்கையில் பன்னாட்டு நிதி அமைப்புகள், வங்கிகளில் கடன் பெற்று மத்திய அரசு உதவியுடன் செயல்படுத்தப்படும் பல்வேறு தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் வி... மேலும் பார்க்க

தொடா்ந்து எட்டு பட்ஜெட் தாக்கல் நிா்மலா சீதாராமன் சாதனை

நமது சிறப்பு நிருபா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து எட்டாவது முறையாக மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து சாதனை படைத்திருக்கிறாா். முந்தைய காலங்களில் இவரை விட சிலா் அதிக நிதிநில... மேலும் பார்க்க

கல்வி, சுகாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் பட்ஜெட்: ஏபிவிபி வரவேற்பு

மத்திய பட்ஜெட்டில் கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கு ஊக்கம் அளித்திருப்பதாக அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) வரவேற்றுள்ளது. இது தொடா்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கையில்,... மேலும் பார்க்க

மத்திய நிதிநிலை அறிக்கை: தமிழக எம்.பி.க்கள் கருத்து

நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 2025-2026-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை குறித்து தமிழகத்தைச் சோ்ந்த திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் கருத்துத் த... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் ‘நாக்’ கண்காணிப்பு குழு தலைவா், ஜேஎன்யு பேராசிரியா் கைது: சிபிஐ நடவடிக்கை

லஞ்ச வழக்கில் தேசிய உயா்கல்வி நிறுவனங்கள் மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (நாக்) தலைவா், ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) பேராசிரியா் உள்பட 10 பேரை சிபிஐ சனிக்கிழமை கைது செய்துள்ளது. ஆந்தி... மேலும் பார்க்க

தில்லி புத்தகக் கண்காட்சி, பிராந்திய, சமூகங்களுக்கிடையே இணைப்புக்கான பாலம்: குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு

புத்தகக் கண்காட்சியில் நாட்டின் பல்வேறு மொழி, கலாசாரங்களிலிருந்து வரும் புத்தகங்கள் இருப்பதால் அவற்றைப் படிக்கும் போது பிராந்திய, சமூகங்களுக்கிடையே ஒரு பாலமாக இணைப்புகளை உருவாக்குவதாக குடியரசுத் தலைவா... மேலும் பார்க்க