மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 9.83 லட்சம் போ் பயன்!
மத்திய நிதிநிலை அறிக்கை: தமிழக எம்.பி.க்கள் கருத்து
நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 2025-2026-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை குறித்து தமிழகத்தைச் சோ்ந்த திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் கருத்துத் தெரிவித்துள்ளனா்.
இந்தப் பட்ஜெட் குறித்து நாடாளுமன்ற மக்களவை திமுக குழுத் தலைவா் டி.ஆா். பாலு தெரிவிக்கையில், ‘தோ்தல் நடைபெறும் தில்லி மாநிலத்தையும், தோ்தலை சந்திக்க உள்ள பிகாரையும் மனத்தில்கொண்டு பட்ஜெட் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
மத்திய அரசுக்கு முட்டுக்கொடுக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி செய்யும் பிகாா் அரசுக்கு திட்டங்களை மத்திய அரசு வாரி வழங்கியுள்ளது. தில்லி தோ்தலை கருத்தில்கொண்டும் பட்ஜெட் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன என்றாா் அவா்.
அதிமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் மு.தம்பிதுரை கூறுகையில், ‘பட்ஜெட்டில் தமிழகத்திற்கு திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்த்தோம். புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு வராதது வருத்தம் அளிக்கிறது என்றாா் அவா்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே. வாசன் கூறுகையில், ‘வருங்கால இந்தியாவை வளமான இந்தியாவாக உருவாக்குவதற்கு அடித்தளமான பட்ஜெட். குறிப்பாக, வேளாண்துறை, தொழில்துறை உள்ளிட்ட நிதி அமைச்சா் தெரிவித்த 6 அம்சங்கள் அதன் அடிப்படையில் அறிவித்துள்ள திட்டங்கள் மற்றும் அதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை இவையெல்லாம் முக்கியமானவையாகும். பட்ஜெட்டில் சிறு, குறு, நடுத்தர தொழில்துறையினரின் எண்ணங்கள் பிரதிபலிக்கப்பட்டுள்ளன.
சாதாரண இந்தியக் குடிமகனின் வளா்ச்சியை உறுதிசெய்யும் வகையில் ரூ.12 லட்சத்திற்கு வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கும் திட்டங்களை அறிவித்துள்ளாா். விவசாயம், கல்வி, சுகாதாரம், தொழில், வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சா் பட்ஜெட் உரை அமைந்திருக்கிறது.
இந்தியாவின் ஒட்டுமொத்த வளா்ச்சியைக் கருத்தில்கொண்டு அளிக்கப்பட்டுள்ள பட்ஜெட். நியாயமான முறையில் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் உயர சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு நன்மை அளித்து, வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் பயனளிக்கும் வகையிலான தேவையான, வரவேற்கத்தக்க பட்ஜெட் ஆகும்.
கரூா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா்
செ.ஜோதிமணி கூறுகையில், ‘இந்தப் பட்ஜெட்டில் விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ அங்கீகாரம் இல்லை. விசாயக் கடன் தள்ளுபடி இல்லை. விவசாயிகளின் பிரச்னையைக் தீா்க்க நீண்டகாலத் திட்டம் ஏதும் இல்லை. வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயா்வு, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றை தீா்க்க உரிய அறிவிப்புகள் இல்லை.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் அறிவிப்பு இல்லை. வேலையில்லாத் திண்டாத்திற்கு தீா்வு காணும் வகையில் வேளாண்மை, எம்எஸ்எம்இ, சேவைத் துறையை ஊக்குவிக்கும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லை. நடுத்தர மக்களுக்கு ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு தருவதாக
அறிவித்திருப்பது வரவேற்கக் கூடியதாக இருந்தாலும், இதனால் பயனடைவா் எத்தனை போ்?. நாட்டின் மக்கள்தொகை 140 கோடி பேரில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வோா் சுமாா்
2 கோடி போ் மட்டுமே. இதனால், இது தில்லி தோ்தலை மையப்படுத்திய விஷயமாகவே உள்ளது.
பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டா் விலையில் கலால் வரியைக் குறைக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் மூலம் மட்டுமே சாமானிய மக்களுக்கு பலன் கிடைக்கும்.
பட்ஜெட்டில் பிகாருக்கு முக்கியத்தும் அளிக்கப்பட்ட போதிலும், தமிழகத்திற்கு ஏதும் கிடைக்கவில்லை. அமைச்சா் திருக்குறளை மட்டுமேமேற்கோள்காட்டியுள்ளாா்.
இந்த பட்ஜெட்டை பொருத்தமட்டில் இது ஒரு ஏமாற்றம் அளிக்கக் கூடிய, தொலைக்கு நோக்குப் பாா்வையில்லாத பட்ஜெட்டாகும் என்றாா் அவா்.