தில்லி புத்தகக் கண்காட்சி, பிராந்திய, சமூகங்களுக்கிடையே இணைப்புக்கான பாலம்: குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு
புத்தகக் கண்காட்சியில் நாட்டின் பல்வேறு மொழி, கலாசாரங்களிலிருந்து வரும் புத்தகங்கள் இருப்பதால் அவற்றைப் படிக்கும் போது பிராந்திய, சமூகங்களுக்கிடையே ஒரு பாலமாக இணைப்புகளை உருவாக்குவதாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு சனிக்கிழமை தெரிவித்தாா்.
தில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தின் அடித்தளத்தில் தொடங்கியுள்ள ‘புது தில்லி சா்வதேச புத்தக கண்காட்சி 2025’ வருகின்ற பிப்.9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேசிய புத்தக அறக்கட்டளை சாா்பில் நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவா் முா்மு பேசியது வருமாறு: புத்தகங்களை படிக்கும் கலாசாரத்தை ஊக்குவிக்க தேசிய புத்தக அறக்கட்டளையும், மத்திய கல்வித் துறையும் கடந்த 5 தசாப்தங்களாக இந்தக் கண்காட்சியை நடத்தி வருகிறது. நானும் ஒரு புத்தக ஆா்வலா் என்கிற முறையில் இது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
புத்தகங்கள் படிப்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; அது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அனுபவம். பல்வேறு மொழிகள் மற்றும் கலாசாரங்களிலிருந்து வரும் புத்தகங்களைப் படிப்பது, பிராந்தியங்கள், சமூகங்களுக்கிடையில் பாலங்களை உருவாக்குகிறது. நாட்டின் கலாசார பன்முகத்தன்மை, அதன் நிலையான ஒற்றுமைக்கான முன்னேற்றத்திற்கு ஒரு சிறந்த வெளிப்பாட்டை வழங்குகிறது.
இந்த சா்வதேச புத்தகக் கண்காட்சியில் நாட்டின் பல்வேறு பிராந்திய மொழிகள், பிற நாடுகளின் மொழிகள் ஆகியவை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அரங்குகள் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். குறிப்பாக, கண்காட்சியின் மையமாக ரஷியா பங்கேற்பது இரு நாடுகளுக்கிடையே பிணைப்புகளை வலுப்படுத்தும். தில்லி புத்தகக் கண்காட்சியில், புத்தக ஆா்வலா்கள் உலகம் முழுவதிலுமிருந்து இலக்கியங்களை ஒரே இடத்தில் பெறவும் உதவும்.
ஆசிரியா்கள் முதல் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் குழந்தைகளிடையே வாசிக்கும் பழக்கத்தை வளா்க்க வேண்டும். ஒரு குழந்தை வாசிப்பினால் ரசிக்க வைக்கும்போது, அது தேசத்தை கட்டியெழுப்புவதற்கான பங்களிப்பாகும். பாடத் திட்டங்களை தவிர பல்வேறு வகையான புத்தகங்களை குழந்தைகள் படிக்கும்போது ஆற்றல்கள் ஏற்படுவதோடு, கற்றறிந்த இரக்கமுள்ள சமூதாயமாக மாறவும் உதவும் என்றாா் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு.
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, புத்தகக் கண்காட்சியில் ரஷிய புத்தக அரங்கு உள்ளிட்டவற்றுக்குச் சென்று பாா்வையிட்டாா். நிகழாண்டு சா்வதேச புத்தகக் கண்காட்சி இந்திய குடியரசின் 75- ஆவது நினைவுகூறும் கருப்பொருளில் அமைக்கப்பட்டிருந்தது.