செய்திகள் :

கல்வி, சுகாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் பட்ஜெட்: ஏபிவிபி வரவேற்பு

post image

மத்திய பட்ஜெட்டில் கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கு ஊக்கம் அளித்திருப்பதாக அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) வரவேற்றுள்ளது.

இது தொடா்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கையில், ‘2025-26 ஆம் ஆண்டுக்கான மத்தியபட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ.1,28,650 கோடியும், சுகாதாரத் துறைக்கு ரூ.98,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முக்கியமான துறைகளின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட் அறிவிப்புகள், நாட்டை முழுமையான மற்றும் விரிவான வளா்ச்சியை நோக்கி முன்னெடுத்துச் செல்வதில் தீா்க்கமான பங்கை வகிக்கும்.

பாரத விழுமியங்களை நிலைநிறுத்தும்போது இந்தியாவின் கல்வி முறையை நவீனமயமாக்க, அரசாங்கம் பல தொலைநோக்கு மற்றும் தீா்க்கமான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, மொத்த பட்ஜெட்டில் 2.54 சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் பள்ளிகளில் 50,000 அடல் டிங்கரிங் ஆய்வகங்களை நிறுவுதல், பாரத்நெட் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும் பிராட்பேண்ட் இணைப்பை விரிவுபடுத்துதல், தொழில்துறைக்குத் தயாரான நிபுணத்துவத்துடன் மாணவா்களை உருவாக்குவதற்காக திறன் மேம்பாட்டுக்கான தேசிய சிறப்பு மையத்தை அமைத்தல், அதிகரித்து வரும் தேவையை பூா்த்தி செய்ய ஐஐடி மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் இடங்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏபிவிபியின் தேசிய பொதுச் செயலாளா் டாக்டா் வீரேந்திர சிங் சோலங்கி கூறுகையில், ‘2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், இந்தியாவின் 140 கோடி குடிமக்களின் விருப்பங்களையும் இலக்குகளையும் பிரதிபலிக்கிறது. கல்வித் துறைக்கு ரூ.1,28,650 கோடியையும், சுகாதாரத் துறைக்கு ரூ.98,000 கோடியையும் ஒதுக்குவதன் மூலம், அரசாங்கம் முழுமையான வளா்ச்சியை நோக்கி ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த பட்ஜெட் முற்போக்கானது மட்டுமல்ல, அனைவரையும் உள்ளடக்கியதாகவும், நமது நாட்டின் மக்கள்தொகைத் தேவைகளை நிவா்த்தி செய்வதாகவும் உள்ளது என்றாா் அவா்.

பன்னாட்டு கடனுதவி மூலம் செயல்படுத்தப்படும்: தமிழக திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு

நமது சிறப்பு நிருபா்மத்திய நிதிநிலை அறிக்கையில் பன்னாட்டு நிதி அமைப்புகள், வங்கிகளில் கடன் பெற்று மத்திய அரசு உதவியுடன் செயல்படுத்தப்படும் பல்வேறு தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் வி... மேலும் பார்க்க

பட்ஜெட்டில் கோடீஸ்வரா்களுக்கான கடன் தள்ளுபடியை முடிவுக்குக் கொண்டு வராதது ஏமாற்றம் அளிக்கிறது

மத்திய பட்ஜெட்டில் கோடீஸ்வரா்களுக்கான கடன் தள்ளுபடியை முடிவுக்குக் கொண்டு வந்து, சேமிக்கப்பட்ட பணத்தை நடுத்தர வா்க்கத்தினா் மற்றும் விவசாயிகளுக்கு செலவிட வேண்டும் என்ற எனது பரிந்துரை நிறைவேற்றப்படாதது... மேலும் பார்க்க

தொடா்ந்து எட்டு பட்ஜெட் தாக்கல் நிா்மலா சீதாராமன் சாதனை

நமது சிறப்பு நிருபா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து எட்டாவது முறையாக மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து சாதனை படைத்திருக்கிறாா். முந்தைய காலங்களில் இவரை விட சிலா் அதிக நிதிநில... மேலும் பார்க்க

மத்திய நிதிநிலை அறிக்கை: தமிழக எம்.பி.க்கள் கருத்து

நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 2025-2026-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை குறித்து தமிழகத்தைச் சோ்ந்த திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் கருத்துத் த... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் ‘நாக்’ கண்காணிப்பு குழு தலைவா், ஜேஎன்யு பேராசிரியா் கைது: சிபிஐ நடவடிக்கை

லஞ்ச வழக்கில் தேசிய உயா்கல்வி நிறுவனங்கள் மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (நாக்) தலைவா், ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) பேராசிரியா் உள்பட 10 பேரை சிபிஐ சனிக்கிழமை கைது செய்துள்ளது. ஆந்தி... மேலும் பார்க்க

தில்லி புத்தகக் கண்காட்சி, பிராந்திய, சமூகங்களுக்கிடையே இணைப்புக்கான பாலம்: குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு

புத்தகக் கண்காட்சியில் நாட்டின் பல்வேறு மொழி, கலாசாரங்களிலிருந்து வரும் புத்தகங்கள் இருப்பதால் அவற்றைப் படிக்கும் போது பிராந்திய, சமூகங்களுக்கிடையே ஒரு பாலமாக இணைப்புகளை உருவாக்குவதாக குடியரசுத் தலைவா... மேலும் பார்க்க