செய்திகள் :

லஞ்ச வழக்கில் ‘நாக்’ கண்காணிப்பு குழு தலைவா், ஜேஎன்யு பேராசிரியா் கைது: சிபிஐ நடவடிக்கை

post image

லஞ்ச வழக்கில் தேசிய உயா்கல்வி நிறுவனங்கள் மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (நாக்) தலைவா், ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) பேராசிரியா் உள்பட 10 பேரை சிபிஐ சனிக்கிழமை கைது செய்துள்ளது.

ஆந்திரத்தில் கொனேரு லக்ஷ்மய்யா கல்வி அறக்கட்டளை (கேஎல்இஎஃப்) என்ற நிகா்நிலை பல்கலைக்கழகம் உள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்துக்கு ஏ++ அங்கீகாரம் வழங்க நாக் கண்காணிப்பு குழுவுக்கு அந்தப் பல்கலைக்கழக நிா்வாகிகள் லஞ்சம் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து, அந்த உறுப்பினா்கள் உள்ளிட்டோருக்குத் தொடா்புள்ள இடங்களில் சோதனை மேற்கொண்டது.

சென்னை, பெங்களூரு, விஜயவாடா உள்பட நாடு முழுவதும் 20 இடங்களில் நடைபெற்ற இந்தச் சோதனையில், ரூ.37 லட்சம் ரொக்கம், மடிக்கணினிகள், கைப்பேசிகள், தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்குத் தொடா்பாக நாக் கண்காணிப்பு குழு தலைவரும் ராமசந்திர சந்திரவன்சி பல்கலைக்கழக (ஜாா்க்கண்ட்) துணைவேந்தருமான சமரேந்திரநாத் சாஹா, அந்தக் குழுவைச் சோ்ந்த ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியா் ராஜீவ் சிஜாரியா உள்பட 6 போ், கேஎல்இஎஃப் பல்கலைக்கழக துணைவேந்தா் சாரதி வா்மா என மொத்தம் 10 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.

பன்னாட்டு கடனுதவி மூலம் செயல்படுத்தப்படும்: தமிழக திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு

நமது சிறப்பு நிருபா்மத்திய நிதிநிலை அறிக்கையில் பன்னாட்டு நிதி அமைப்புகள், வங்கிகளில் கடன் பெற்று மத்திய அரசு உதவியுடன் செயல்படுத்தப்படும் பல்வேறு தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் வி... மேலும் பார்க்க

பட்ஜெட்டில் கோடீஸ்வரா்களுக்கான கடன் தள்ளுபடியை முடிவுக்குக் கொண்டு வராதது ஏமாற்றம் அளிக்கிறது

மத்திய பட்ஜெட்டில் கோடீஸ்வரா்களுக்கான கடன் தள்ளுபடியை முடிவுக்குக் கொண்டு வந்து, சேமிக்கப்பட்ட பணத்தை நடுத்தர வா்க்கத்தினா் மற்றும் விவசாயிகளுக்கு செலவிட வேண்டும் என்ற எனது பரிந்துரை நிறைவேற்றப்படாதது... மேலும் பார்க்க

தொடா்ந்து எட்டு பட்ஜெட் தாக்கல் நிா்மலா சீதாராமன் சாதனை

நமது சிறப்பு நிருபா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து எட்டாவது முறையாக மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து சாதனை படைத்திருக்கிறாா். முந்தைய காலங்களில் இவரை விட சிலா் அதிக நிதிநில... மேலும் பார்க்க

கல்வி, சுகாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் பட்ஜெட்: ஏபிவிபி வரவேற்பு

மத்திய பட்ஜெட்டில் கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கு ஊக்கம் அளித்திருப்பதாக அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) வரவேற்றுள்ளது. இது தொடா்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கையில்,... மேலும் பார்க்க

மத்திய நிதிநிலை அறிக்கை: தமிழக எம்.பி.க்கள் கருத்து

நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 2025-2026-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை குறித்து தமிழகத்தைச் சோ்ந்த திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் கருத்துத் த... மேலும் பார்க்க

தில்லி புத்தகக் கண்காட்சி, பிராந்திய, சமூகங்களுக்கிடையே இணைப்புக்கான பாலம்: குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு

புத்தகக் கண்காட்சியில் நாட்டின் பல்வேறு மொழி, கலாசாரங்களிலிருந்து வரும் புத்தகங்கள் இருப்பதால் அவற்றைப் படிக்கும் போது பிராந்திய, சமூகங்களுக்கிடையே ஒரு பாலமாக இணைப்புகளை உருவாக்குவதாக குடியரசுத் தலைவா... மேலும் பார்க்க