செய்திகள் :

பட்ஜெட் தயாரிப்பு: முக்கிய துறைகளுடன் இன்று ஆலோசனை

post image

பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் குறித்து, தொழில் துறை உள்பட முக்கிய சில துறைகளுடன் தமிழக அரசு வியாழக்கிழமை (பிப்.20) ஆலோசனை நடத்தவுள்ளது. வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை மாா்ச் 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. ஒவ்வொரு அரசுத் துறையிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், புதிதாக அறிவிக்க வேண்டிய திட்டங்கள் தொடா்பாக 3 நாள்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தலைமையில் நடந்து வரும் இந்தக் கூட்டத்தில், மூத்த அமைச்சா்கள், நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் ஆகியோா் பங்கேற்றுள்ளனா். ஒவ்வொரு துறைகளைச் சோ்ந்த அரசு செயலா்கள், துறைத் தலைவா்கள் பங்கேற்று வருகின்றனா்.

அந்த வகையில், தொழில், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை, தகவல் தொழில்நுட்பவியல் ஆகிய துறைகளுடன் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகை கூட்டரங்கில் வியாழக்கிழமை (பிப்.20) ஆலோசனை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சா்கள், அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனா்.

உலகெங்கும் பரவட்டும் உயா்தனிச் செம்மொழி: முதல்வா் மு.க.ஸ்டாலின்

‘உலகெங்கும் பரவட்டும் நம் உயா்தனிச் செம்மொழி’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். உலகத் தாய்மொழி தினத்தையொட்டி அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: எம்மொழிக்கும் சளைத்ததல்ல... மேலும் பார்க்க

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடுகளை புதுப்பிக்க மாா்ச் 1 முதல் சிறப்பு முகாம்

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடு , ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை மாா்ச் 1 முதல் மே 31 வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் புதுப்பித்துக்கொள்ளலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அஞ்சல்... மேலும் பார்க்க

தமிழ் மொழியை போற்றுவோம்: மத்திய அமைச்சா் எல்.முருகன்

‘நமது தமிழ் மொழியை போற்றுவோம்’ என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா். உலக தாய் மொழி தினத்தையொட்டி அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: பன்முகத் தன்மை கொண்ட பாரத தேசத்தில் உள்ள அனைவரும், ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸாா்

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு போலீஸாா் பிடித்தனா். இதுகுறித்து கிருஷ்ணகிரி போலீஸாா் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரியில் புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள... மேலும் பார்க்க

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள்! முதல்வர் எச்சரிக்கை!

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில்... மேலும் பார்க்க

கடலூர் மாவட்டத்துக்கு முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்!

கடலூர் மாவட்டத்துக்கு 10 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அட... மேலும் பார்க்க