செய்திகள் :

பட்ஜெட் தாக்கல்: ஏற்றத்துடன் நிறைவடைந்த பங்குச்சந்தை!

post image

பங்குச்சந்தைகள் இன்று(பிப். 1) ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளன.

2025-26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று(பிப். 1) தாக்கல் செய்யப்படவிருப்பதால் பங்குச் சந்தை வணிகம் இன்று நடைபெற்றது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,888.89 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

பட்ஜெட் தாக்கலின்போது பங்குச்சந்தை ஏற்றமடைந்த நிலையில், பின்னர் சரிந்தது.

இறுதியில் வர்த்தகம் முடிவில் சென்செக்ஸ் 746.15 புள்ளிகள் அதிகரித்து 77,505.96 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 232.65  புள்ளிகள் உயர்ந்து 23,482.15 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது.

இதையும் படிக்க | மத்திய பட்ஜெட்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூறுவது என்ன?

துறைகளில் நுகர்வோர் சாதனங்கள், ரியல் எஸ்டேட், ஆட்டோ மொபைல், எஃப்எம்சிஜி ஆகிய துறைகள் உயர்ந்த நிலையில், மின்சாரம், உலோகம், ஐடி, எரிசக்தி, பொதுத்துறை நிறுவனங்கள் சரிந்தன.

ஐடி, எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை தவிர, மற்ற அனைத்து துறைகளும் ஏற்றம் கண்டு வருகின்றன. மின்சாரம், ரியல் எஸ்டேட், நுகர்வோர் சாதனங்கள், எஃப்எம்சிஜி துறைகள் 0.5 முதல் 1 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.

நிஃப்டியில் எல்& டி, பாரத் எலக்ட்ரானிக்ஸ், பவர் கிரிட் கார்ப், எச்டிஎஃப்சி லைஃப், சிப்லா ஆகியவை அதிகமாக நஷ்டமடைந்த நிறுவனங்களாகும்.

அதேநேரத்தில் டிரென்ட், மாருதி சுசுகி, டாடா கன்ஸ்யூமர், ஈச்சர் மோட்டார்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவை லாபமடைந்தன.

பட்ஜெட் எதிரொலி: ரூ. 62,000-யைக் கடந்த தங்கம் விலை!

மத்திய பட்ஜெட் எதிரொலியாக ஒரேநாளில் 2-வது முறையாக தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. கடந்த ஜன. 22 ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.6... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்ந்தது!

2025-26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று(பிப். 1) தாக்கல் செய்யப்படவிருப்பதால் பங்குச் சந்தை இன்று செயல்படுகின்றன. அதன்படி, பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. மும்பை... மேலும் பார்க்க

பட்ஜெட்: 3-வது முறையாக சனிக்கிழமை செயல்படும் பங்குச் சந்தை!

2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யவிருப்பதால் மும்பை பங்குச் சந்தையும் தேசிய பங்குச் சந்தையும் வழக்கம் போல் செயல்படவுள்ளன.இது குறித்து தேசிய பங்குச் சந்தை வெளியிட்டுள்ள அறிக்கையில் ... மேலும் பார்க்க

சிட்டி யூனியன் வங்கி வருவாய் ரூ.1,707 கோடி

கும்பகோணத்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டுவரும் தனியாா் துறையைச் சோ்ந்த சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வருவாய் கடந்த செப்டம்பா் காலாண்டில் ரூ.1,707 கோடியாக உயா்ந்துள்ளது. இது குறித்து வங்கிய... மேலும் பார்க்க

பரோடா வங்கி நிகர லாபம் 6% அதிகரிப்பு

பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கியின் நிகர லாபம் கடந்த அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் 6 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த அக்டோபா் ம... மேலும் பார்க்க

அறிமுகமானது ஓலா எலக்ட்ரிக் ஜென் 3 ஸ்கூட்டர்!

புதுதில்லி: ஓலா எலக்ட்ரிக் இன்று தனது ஜென் 3 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட மின்சார ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.79,999 முதல் ரூ.1,69,999 வரை வரையறுக்கப்பட்டுள்ளது.சமீபத்த... மேலும் பார்க்க