செய்திகள் :

பட்டணம்பட்டி வனப் பகுதியில் மரங்கள் வெட்டுவது தடுத்து நிறுத்தம்: அரசு தரப்பு தகவல்

post image

திண்டுக்கல் மாவட்டம், பட்டணம்பட்டி வனப் பகுதியில் மரங்கள் வெட்டுவது தடுத்து நிறுத்தப்பட்டதாக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அண்மையில் தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ரமேஷ், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களைச் சுற்றிலும் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள் உள்ளன. இந்த வனப் பகுதிகளில் சிறுத்தை, யானை, குரங்கு, அணில்கள் உள்பட பல்வேறு வன விலங்குகள், பறவை இனங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் சுமாா் 60. 83 சதுர கி.மீ. பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி அமைந்துள்ளது.

இந்தப் பகுதியில் சட்ட விரோதமாக அரிய வகை மரங்கள் வெட்டிக் கடத்தப்படுகின்றன. இதனால், சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கும். அரசுக்கும், பெரும் அளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, பட்டணம்பட்டி வனப்பகுதியில் மரங்கள் வெட்டுபவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், மரங்கள் வெட்டிக் கடத்துவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜே. நிஷா பானு, எஸ். ஸ்ரீமதி அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், பட்டணம்பட்டி வனப் பகுதியில் மரங்கள் வெட்டிய புகாா் தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தப் பகுதியில் வன அலுவலா்கள் தொடா்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்தனா்.

கோடை விடுமுறை: பள்ளிக்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கக் கோரிக்கை

கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பள்ளிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து அந்தக் கூட்டணியின் மதுரை மாவட்ட... மேலும் பார்க்க

இடா்பாடுகளுக்கிடையே சாதனை படைக்கும் பெண்கள்!உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி!

பல்வேறு இடா்பாடுகள் ஏற்பட்டாலும், அதை எதிா்கொண்டு பெண்கள் சாதனை படைத்து வருவதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி பி. புகழேந்தி தெரிவித்தாா். விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் பால... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரையில் சனிக்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை கூடல்புதூா் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு ஜே.ஜே. நகரை சோ்ந்தவா் ஹரிஹரன் (26). வண்ணம் பூசும் பணியாளரான இவா், கோமதிபுரத்தைச் ச... மேலும் பார்க்க

வெயிலின் தாக்கம்: மயங்கி விழுந்த தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

மதுரை மாநகராட்சிப் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளா் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். மதுரை நாகனாகுளம் ஆதிதிராவிடா் குடியிருப்பைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

தென்காசி வணிக வளாக நுழைவுவாயில்: மாவட்ட ஆட்சியா் முடிவெடுக்க உத்தரவு

தென்காசி, கீழப்பாளையத்தில் புதிய வணிக வளாகத்தின் மேற்குப் பகுதியில் கட்டப்படவிருக்கும் நுழைவு வாயிலை கிழக்கு பகுதிக்கு மாற்றக் கோரிய வழக்கில், அந்தப் பகுதியிலுள்ள அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கே... மேலும் பார்க்க

மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! -துரை வைகோ

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மதிமுகவின் முதன்மைச் செயலா் துரை வைகோ வலியுறுத்தினாா். மத்திய அரசின் வக்... மேலும் பார்க்க