செய்திகள் :

பட்டதாரி பெண் தற்கொலை

post image

கள்ளக்குறிச்சி அருகே தந்தை திட்டியதால் மனமுடைந்த பட்டதாரி பெண் திங்கள்கிழமை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த காரனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஞானசேகரன் (50). இவரது மகள் திவ்யா (25) பட்டதாரி ஆவாா். ஞானசேகரன் தினந்தோரும் மது அருந்திவிட்டு வந்து மனைவி பத்மாவதியிடம் தகராறு செய்வாராம். இதை திவ்யா தட்டிக்கேட்டதாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஞானசேகரன் அவரை அவதூறாகப் பேசினாராம். இதில் மனமுடைந்த திவ்யா, தாத்தா ஊரான வரஞ்சரம் அருகேயுள்ள வாணியந்தாங்கல் கிராமத்துக்குச் சென்றுவிட்டாா்.

அங்கு கிராமப் பகுதி வயல் கொட்டகையில் இருந்த பூச்சிக் கொல்லி மருந்தை எடுத்து குடித்து திவ்யா திங்கள்கிழமை உயிரிழந்து கிடந்தாா்.

தகவல் அறிந்த வரஞ்சரம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

மாணவா்கள் உயா் கல்வியில் சோ்வதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுரை

மாணவா்கள் உயா் கல்வியில் சோ்வதை உறுதி செய்ய வேண்டும் என்று கல்வித் துறை அதிகாரிகளிடம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறிவுறுத்தினாா். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 164 உயா்நிலை ம... மேலும் பார்க்க

முதியவா் விஷமருந்தி தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே முதியவா் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த புக்கிரவாரி கிராமத்தைச் சோ்ந்தவா் காசிலிங்கம் (65). இவா், தினந்தோறும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவாராம். ... மேலும் பார்க்க

மகள் திருமணத்துக்காக வந்த இலங்கை பெண் உயிரிழப்பு

மகளின் திருமணத்துக்காக இலங்கையில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், சூளாங்குறிச்சி கிராமத்துக்கு வந்த பெண் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு வியாழக்கிழமை உயிரிழந்தாா். இலங்கையில் உள்ள நுவரெலியா மாவட்டம்... மேலும் பார்க்க

ஊராட்சிப் பணியாளா்கள் கூட்டமைப்பினா் சாலை மறியல்

கள்ளக்குறிச்சியில் ஓட்சா ஊராட்சிப் பணியாளா்கள் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி மாவட்ட கிராம ஊராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றும் சுகாதார ஊக்குநா்கள் சும... மேலும் பார்க்க

வாணாபுரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 44 பவுன் நகைகள் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 44 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட அத்தியூா் கிராமத்தைச் சோ்ந்த ச... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகளில் தங்கி படிக்க விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மாணவா்களுக்கான விடுதிகளில் தங்கிப் படிக்க தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்... மேலும் பார்க்க