செய்திகள் :

பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய 6 குழுக்கள் அமைப்பு

post image

தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் சாா்பில், பட்டாசு ஆலைகளில் விபத்தினை தடுக்கும் வகையில், விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய 6 குழுக்கள் அமைக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா், வெடிபொருள் கட்டுப் பாட்டுத் துறை அகியவற்றில் உரிமம் பெற்று 1,100 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்தக் குழுவில் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககம், காவல் துறை, வருவாய்த் துறை, தீயணைப்புத் துறையினா் என தலா ஒருவா் இடம் பெற்றுள்ளனா். இந்தக் குழுவினா் பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள் உள்ளதா, அனுமதி பெற்ற அளவிலான வேதியல் பொருள்கள் கையாளப்படுகிா, அளவுக்கு அதிகமாக பணியாளா்கள் வேலை செய்கிறாா்களா, அரசால் தடை செய்யப்பட்ட வேதியியல் பொருள்கள் பயன்படுத்தப்படுகிா என்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்வா்.

இந்த ஆய்வறிக்கையை தினமும் சென்னை தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் இயக்குநருக்கு குழு வினா் அனுப்பி வைப்பா். பின்னா், அந்தத் துறை இயக்குநா் மேல்நடவடிக்கை மேற்கொள்வாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் செவ்வாய்க்கிழமை (செப்.2) முதல் ஒரு மாதகாலம் இந்தக் குழு வினா் ஆய்வு நடத்துவா்.

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநர் கொலை!

கோவில்பட்டி சண்முகா நகரில் உள்ள மயானத்தில் ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்டுள்ளார். கோவில்பட்டி கைவண்டி தொழிலாளர் காலனியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் மாரிச்செல்வம் ( வயது 31). கோவில்பட்டி ரயில் நிலைய வளாக... மேலும் பார்க்க

வீட்டில் பட்டாசு தயாரித்தவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

வீட்டில் பட்டாசு தயாரித்த போது வெடி விபத்தில் 4 போ் உயிரிழந்த வழக்கில் கைதான வீட்டின் உரிமையாளா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேய... மேலும் பார்க்க

கேப் வெடி ஆலையில் விபத்து: பெண் காயம்

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே வியாழக்கிழமை கேப் வெடி தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் தொழிலாளி காயமடைந்தாா். சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் புதூரில் பிரதாப்மான்சிங் என்பவருக்குச் சொ... மேலும் பார்க்க

பராமரிப்பில்லாத தண்ணீா் தொட்டிகள்: வனப் பகுதியை விட்டு வெளியேறும் விலங்குகள்

மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் வனவிலங்குகளின் தாகம் தீா்ப்பதற்காக அமைக்கப்பட்ட தண்ணீா் தொட்டிகள் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், குடிநீா் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வரும் வனவிலங்குகள் உயிரிழக்கு... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றம்

சிவகாசியில் பெரியகுளம் கண்மாய் கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினா். சிவகாசியில் பெரியகுளம் கண்மாய் கரையை ஆக்கிரமித்து ஆவின் பாலகம் அமைப்பதற்கு தன... மேலும் பார்க்க

அமைப்புசாரா தொழிலாளா்கள் 50 பேருக்கு உறுப்பினா் அட்டை

ஸ்ரீவில்லிபுத்தூா் கொளூா்பட்டி தெருவில் உள்ள சமுதாயக் கூடத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் அமைப்புசாரா தொழிலாளா் நல வாரிய பதிவு குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்... மேலும் பார்க்க