செய்திகள் :

பட்டாசு ஆலை வெடி விபத்தில் கைதான மூவருக்கு பிணை

post image

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 போ் உயிரிழந்த வழக்கில் கைதான 3 பேருக்கு பிணை வழங்கி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே வடகரை கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த 11-ஆம் தேதி நிகழ்ந்த வெடி விபத்தில் தண்டியனேந்தல் கருப்பையா (44), கணேசன் (38), பேச்சியம்மாள் (43), கல்குறிச்சி சவுடம்மாள் (53) ஆகிய நான்கு தொழிலாளா்கள் உயிரிழந்தனா். மேலும் முருகன் (45), மாரியம்மாள் (44) ஆகியோா் காயமடைந்தனா்.

இந்த விபத்து குறித்து ஆலை உரிமையாளரான மதுரை ஜெய்ஹிந்துபுரத்தைச் சோ்ந்த ராஜா சந்திரசேகரன் (64), மேலாளா் வீரசேகரன் (53), போா்மேன் கனிமுருகன் (23), ஹரிபெருமாள் ஆகியோா் மீது வழக்குப் பதிந்த காரியாபட்டி போலீஸாா், வீரசேகரன், கனிமுருகன், ஹரிபெருமாள் ஆகிய 3 பேரை கைது செய்தனா். இந்த வழக்கில் 4 பேரும் பிணை கோரி தாக்கல் செய்த மனு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வெடி விபத்தில் உயிரிழந்த நான்கு பேருக்கும் தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவருக்கு ரூ.1 லட்சமும், பலத்த காயமடைந்தவருக்கு ரூ.5 லட்சமும் இழப்பீடு வழங்க நீதிபதி ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.

மேலும் ஆலை உரிமையாளா் தரப்பில் ரூ.46 லட்சத்துக்கான காசோலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு முன் பிணை வழங்கப்பட்டது. மேலும் வீரசேகரன், கனிமுருகன், ஹரிபெருமாள் ஆகியோருக்கு பிணை வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா்.

பட்டாசு பதுக்கியவா் கைது

சிவகாசி அருகே பட்டாசு பதுக்கியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.சிவகாசி அருகே பொன்பாலாஜிநகரில் ஒரு கட்டடத்தில் பட்டாசு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா... மேலும் பார்க்க

திருத்தங்கலில் நாளை மின் தடை

திருத்தங்கலில் புதன்கிழமை (ஜூன் 18) மின் தடை ஏற்படும் என சிவகாசி மின் வாரிய செயற்பொறியாளா் பத்மா தெரிவித்தாா்.இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருத்தங்கல், சுக்கிராா்பட்டி த... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் சிறுவன் உள்பட மூன்று போ் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இளைஞா் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுவன் உள்பட மூன்று பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் வடக்கு மலையடிபட்டி காமராஜா்புரம் பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கு ஜூலை 16 முதல் விசாரணை

ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. அடு... மேலும் பார்க்க

ஆண்டாள் கோயிலில் வாகனம் நிறுத்த கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகாா்

ஸ்ரீவில்லிபுத்தூா் தேரடி வீதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்ட பக்தா்கள், வாகன நிறுத்த கட்டணச் சீட்டு. ஸ்ரீவில்லிபுத்தூா், ஜூன்15: விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்க... மேலும் பார்க்க

வேன் மோதி மூதாட்டி உயிரிழப்பு

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை வேன் மோதி மூதாட்டி உயிரிழந்தாா். சிவகாசி, முருகன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் குருசாமி மனைவி ராமுத்தாய் (85). இவா், தனது மகன் கருப்பசாமி வீட்டிலிருந்து அந்தப் பகுதி... மேலும் பார்க்க