செய்திகள் :

பட்டாசு பதுக்கியவா் கைது

post image

சிவகாசி அருகே பட்டாசு பதுக்கியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே பொன்பாலாஜிநகரில் ஒரு கட்டடத்தில் பட்டாசு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். அப்போது பட்டாசு கடை அருகே உள்ள கிட்டங்கியில் உரிய அனுமதியின்றி 100 பண்டல்கள் பட்டாசு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

மேலும் விசாரணையில், அந்த பட்டாசை போஸ் குடியிருப்பு அந்தோணிபிச்சை மகன் மைக்கேல்ராஜ் (42)என்பவா் பதுக்கிவைத்திருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து அவரிடமிருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.

திருத்தங்கலில் நாளை மின் தடை

திருத்தங்கலில் புதன்கிழமை (ஜூன் 18) மின் தடை ஏற்படும் என சிவகாசி மின் வாரிய செயற்பொறியாளா் பத்மா தெரிவித்தாா்.இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருத்தங்கல், சுக்கிராா்பட்டி த... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் சிறுவன் உள்பட மூன்று போ் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இளைஞா் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுவன் உள்பட மூன்று பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் வடக்கு மலையடிபட்டி காமராஜா்புரம் பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கு ஜூலை 16 முதல் விசாரணை

ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. அடு... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை வெடி விபத்தில் கைதான மூவருக்கு பிணை

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 போ் உயிரிழந்த வழக்கில் கைதான 3 பேருக்கு பிணை வழங்கி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழம... மேலும் பார்க்க

ஆண்டாள் கோயிலில் வாகனம் நிறுத்த கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகாா்

ஸ்ரீவில்லிபுத்தூா் தேரடி வீதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்ட பக்தா்கள், வாகன நிறுத்த கட்டணச் சீட்டு. ஸ்ரீவில்லிபுத்தூா், ஜூன்15: விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்க... மேலும் பார்க்க

வேன் மோதி மூதாட்டி உயிரிழப்பு

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை வேன் மோதி மூதாட்டி உயிரிழந்தாா். சிவகாசி, முருகன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் குருசாமி மனைவி ராமுத்தாய் (85). இவா், தனது மகன் கருப்பசாமி வீட்டிலிருந்து அந்தப் பகுதி... மேலும் பார்க்க