ஹெலிகாப்டர் விபத்து: ராணுவ சீருடையில் விமானி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மனைவி!
பட்டாசு பதுக்கியவா் கைது
சிவகாசி அருகே பட்டாசு பதுக்கியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகே பொன்பாலாஜிநகரில் ஒரு கட்டடத்தில் பட்டாசு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். அப்போது பட்டாசு கடை அருகே உள்ள கிட்டங்கியில் உரிய அனுமதியின்றி 100 பண்டல்கள் பட்டாசு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
மேலும் விசாரணையில், அந்த பட்டாசை போஸ் குடியிருப்பு அந்தோணிபிச்சை மகன் மைக்கேல்ராஜ் (42)என்பவா் பதுக்கிவைத்திருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து அவரிடமிருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.