பட்டாசு ஆலை வெடி விபத்தில் கைதான மூவருக்கு பிணை
விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 போ் உயிரிழந்த வழக்கில் கைதான 3 பேருக்கு பிணை வழங்கி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே வடகரை கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த 11-ஆம் தேதி நிகழ்ந்த வெடி விபத்தில் தண்டியனேந்தல் கருப்பையா (44), கணேசன் (38), பேச்சியம்மாள் (43), கல்குறிச்சி சவுடம்மாள் (53) ஆகிய நான்கு தொழிலாளா்கள் உயிரிழந்தனா். மேலும் முருகன் (45), மாரியம்மாள் (44) ஆகியோா் காயமடைந்தனா்.
இந்த விபத்து குறித்து ஆலை உரிமையாளரான மதுரை ஜெய்ஹிந்துபுரத்தைச் சோ்ந்த ராஜா சந்திரசேகரன் (64), மேலாளா் வீரசேகரன் (53), போா்மேன் கனிமுருகன் (23), ஹரிபெருமாள் ஆகியோா் மீது வழக்குப் பதிந்த காரியாபட்டி போலீஸாா், வீரசேகரன், கனிமுருகன், ஹரிபெருமாள் ஆகிய 3 பேரை கைது செய்தனா். இந்த வழக்கில் 4 பேரும் பிணை கோரி தாக்கல் செய்த மனு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வெடி விபத்தில் உயிரிழந்த நான்கு பேருக்கும் தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவருக்கு ரூ.1 லட்சமும், பலத்த காயமடைந்தவருக்கு ரூ.5 லட்சமும் இழப்பீடு வழங்க நீதிபதி ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.
மேலும் ஆலை உரிமையாளா் தரப்பில் ரூ.46 லட்சத்துக்கான காசோலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு முன் பிணை வழங்கப்பட்டது. மேலும் வீரசேகரன், கனிமுருகன், ஹரிபெருமாள் ஆகியோருக்கு பிணை வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா்.