Doctor Vikatan: நாவல் பழம் சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை அளவு குறையுமா?
ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கு ஜூலை 16 முதல் விசாரணை
ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. அடுத்த மாதம் ஜூலை 16-ஆம் தேதி முதல் வழக்கு விசாரணை தொடங்குகிறது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூரைச் சோ்ந்த அதிமுக நிா்வாகி ரவீந்திரன், தனது உறவினருக்கு ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக அளித்த புகாரின் பேரில் விருதுநகா் குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த 2021 நவம்பரில் அதிமுக நிா்வாகி விஜய் நல்லதம்பி, முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி, மற்றொரு நிா்வாகி மாரியப்பன் ஆகியோா் மீது மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தனா்.
அதே நாளில் அதிமுக நிா்வாகி விஜய் நல்லதம்பி, சத்துணவு, கூட்டுறவு, ஆவின், ஊராட்சி செயலா் உள்ளிட்ட வேலைகளுக்கு பலரிடம் பணம் பெற்று, முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜியிடம் ரூ.3 கோடி கொடுத்ததாக அளித்த புகாரின் பேரில் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளா்கள் பாபுராஜ், பலராமன், முத்துப்பாண்டி ஆகிய 4 போ் மீது மோசடி உள்பட 4 பிரிவுகளில் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோா் மீது கடந்த 2023 ஜனவரி மாதம் ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் இணையம் (ஆன் லைன்) வழியாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோா் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி இணையம் வழியாக குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனா். இந்த வழக்கை முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றம், மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு கடந்த மே 19-ஆம் தேதி மாற்றியது. இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. இதைத் தொடா்ந்து அடுத்த மாதம் ஜூலை 16-ஆம் தேதி முதல் வழக்கு விசாரணை தொடங்குகிறது.