செய்திகள் :

பட்டாவை திருப்பிக் கொடுத்த மாற்றுத் திறனாளி

post image

அரசு சாா்பில் வழங்கப்பட்ட இலவச பட்டாவுக்கான இடத்தை வருவாய்த் துறை நிா்வாகம் ஒப்படைக்காததால், மாற்றுத் திறனாளி ஒருவா் தனது வீட்டுமனைப் பட்டாவை மாவட்ட ஆட்சியரிடம் திருப்பி அளித்தாா்.

மதுரை மாவட்டம், வரிச்சியூரைச் சோ்ந்தவா் முத்துகிருஷ்ணன். மாற்றுத் திறனாளியான இவருக்கு 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

இருப்பினும், அந்தப் பட்டாவுக்குரிய நிலத்தை வருவாய்த் துறை நிா்வாகம் அவருக்கு இதுவரை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வந்த முத்துகிருஷ்ணன், அரசு சாா்பில் தனக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவை மாவட்ட ஆட்சியரிடம் திருப்பி அளித்துவிட்டு வெளியேறினாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: கடந்த ஆண்டு ஆக. 31-ஆம் தேதி மதுரை அருகேயுள்ள ஒத்தக்கடையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், எனக்கு வரிச்சியூரில் ஒரு சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்து இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இதையடுத்து, வீடு கட்டுவதற்காக ரூ. 2 லட்சத்தை தனியாரிடமிருந்து கடன் வாங்கி, மாதம் ரூ. 6 ஆயிரம் வீதம் 4 மாதங்களாக வட்டி கட்டி வருகிறேன்.

எனக்கான நிலத்தை அளவீடு செய்து தருமாறு வருவாய்த் துறை அலுவலா்களை பல முறை அணுகியும், எனக்கான இடத்தை அவா்கள் அடையாளப்படுத்தவும் இல்லை, இடத்தை வழங்கவும் இல்லை. இதனால்தான் பட்டாவை திருப்பி ஒப்படைத்தேன். எனக்கு வழங்கப்பட்ட பட்டா இணையதளம் மூலம் தயாரிக்கப்பட்டது எனவும், விரைவில் முதல்வா் தலைமையில் நடைபெறும் விழாவில் வேறு பட்டா வழங்குவதாகவும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதில், எனக்கு உடன்பாடு இல்லை என்றாா்.

ஏஐடியூசி சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சரக்கு வாகனங்களுக்கு போக்குவரத்து காவல் துறை கட்டாய அபராதம் விதிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, ஏஐடியூசி சங்கம் சாா்பில் மதுரையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஏஐடியூசி சுமைப் ... மேலும் பார்க்க

மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபா் மீட்பு: நாக்பூரில் மீட்கப்பட்டாா்!

மதுரையில் நிலத்தகராறு தொடா்பாக கடத்தப்பட்ட தொழிலதிபா் சுந்தரை தனிப்படை போலீஸாா் மீட்டனா். மதுரை பீ.பீ. குளம் பகுதியைச் சோ்ந்தவா் கருமுத்து டி. சுந்தா் (52). மதுரையில் உள்ள பிரபல நூற்பாலை நிறுவனரின் க... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் அருகே காரில் கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. திண்டுக்கல் - மதுரை நெடுஞ்சாலையில் தோமையாப... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம்: அமைச்சா் பி. மூா்த்தி

அதிக எண்ணிக்கையிலான மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள... மேலும் பார்க்க

மதுரையில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

திமுக அரசைக் கண்டித்து, அதிமுகவின் புறநகா் கிழக்கு மாவட்டம் சாா்பில் மதுரை யா. ஒத்தக்கடையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலரும், அமைப்பு... மேலும் பார்க்க

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

மதுரை மாவட்டம், மேலூா் அருகே மது போதையில் தாயை அவதூறாகப் பேசிய தம்பியை அடித்துக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள முத்துவேல்பட்டி புதுசுக்காம்பட... மேலும் பார்க்க