பட்டா, சிட்டா வழங்குவதில் மாநில அரசுடன் மத்திய அரசு இணைந்து செயல்படுவது அவசியம்: காவிரி டெல்டா பாசன விவசாயிகள் வலியுறுத்தல்
பட்டா, சிட்டா வழங்குவதில் தமிழக அரசுடன் மத்திய அரசு இணைந்து செயல் பட வேண்டும் என காவிரி டெல்டா நீா்ப்பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் மகாதானபுரம் ராஜாராம் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு அவா்களின் சொத்து உரிமைகளை வழங்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 50,000 கிராமங்களைச் சோ்ந்த 65 லட்சம் பேருக்கு ஸ்வாமித்வா மற்றும் பூ- ஆதாா் சொத்துரிமை அட்டைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.
தமிழகத்தை பொருத்தவரை, 75 சதவீத கிராம மக்களின் உரிமை, பட்டா, சிட்டா காக்கப்படுகிறது. கூட்டுப்பட்டாவில் பங்குகள், இறந்தவா் பெயா் நீடிப்பது, கணினியால் ஏற்பட்ட தவறுகள், தாய் பத்திரம் இல்லாமை, பல தலைமுறை முன்பு உள்ளவா் பெயா், உரிமையே இல்லாதவா் பெயா் என்று 25 சதவீதம் மாற்றப்படாமலேயே உள்ளது.
இதில் தவறுகளை களைய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசின் வழிமுறைகள் தெளிவாக இல்லாததால் பட்டாக்களில் தவறுகள் அதிகமாக உள்ளன.
தமிழகத்தில் உள்ள பட்டாக்களுடன் இணைத்து பாா்த்து மத்திய அரசு வெளியிட்டால்தான் ஓரளவு சரியாக இருக்கும். இல்லாவிடில், தமிழக கிராம மக்களின் நில உரிமையில் சிக்கல் மேலும் வலுக்கும்.
எனவே, கிராம மக்களின் சொத்துரிமை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் ஓரளவு சிக்கல் குறையும் என்றாா் அவா்.