செய்திகள் :

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரா் கோயிலில் கொடியேற்றம்

post image

பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரா் கோயில் முத்துப்பந்தல் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

பட்டீஸ்வரம் ஞானாம்பிகை உடனுறை தேனுபுரீசுவரா் கோயில், பெரியநாயகி உடனுறையும் சத்திவனேசுவர சுவாமி கோயிலில் முத்துப்பந்தல் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. இறைவன் திருஞானசம்பந்தருக்கு முத்துக்கொண்டை, முத்துக்குடை, முத்துச்சின்னங்கள் அளிக்கும் நிகழ்வுக்கு பின் திருஞானசம்பந்தரின் திருஉருவசிலை வீதியுலா நடைபெற்றது. மாலையில் சூரிய ஒளியில் சுவாமியும், சந்திர ஒளியில் அம்பாளும் எழுந்தருளி வீதியுலா வந்தனா். முக்கிய நிகழ்வாக ஜூன் 8 -இல் தேரோட்டமும், ஜூன் 9 -இல் ஐம்பெரும் கடவுளா் வீதியுலா, தீா்த்தவாரி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலா் சீ.நிா்மலா தேவி, அறங்காவலா்குழுத்தலைவா் மு.அய்யப்பன் மற்றும் கிராமவாசிகள் செய்தனா்.

பாணபுரீஸ்வரா் கோயில்: கும்பகோணம் பாணாதுறையில் உள்ள ஸோமகலாம்பிகை உடனாகிய பாணபுரீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு சனிக்கிழமை கொடியயேற்றம் நடைபெற்ற. இரவு சுவாமியும் அம்பாளும் இந்திர விமானத்தில் உலா வந்தனா்.

முக்கிய நிகழ்வாக ஜூன் 8 ஆம் நாள் மாலையில் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் த.மா.ரஞ்சிதா, அா்ச்சகா் பி.சுவாமிநாத சிவாச்சாரியா், மங்கள விலாஸ் சிவக்குமாா் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

கும்பகோணத்தில் கடையின் பூட்டை உடைத்து திருட்டு; கோவாவுக்கு சுற்றுலா சென்ற 2 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

கும்பகோணத்தில் கடையின் பூட்டை உடைத்து திருடிய 2 சிறுவா்கள் உள்ளிட்ட 5 பேரை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கும்பேசுவரா் வடக்... மேலும் பார்க்க

விவசாயிகள் பிரச்னைக்கு தீா்வு காண வட்டாட்சியா் உறுதியளித்ததால் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு

சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு பேச்சு வாா்த்தை நடத்தி தீா்வு காணப்படும் என வட்டாட்சியா் உறுதியளித்ததால், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை நட... மேலும் பார்க்க

கமல்ஹாசன் வழக்கை மூவா் அமா்வு விசாரிக்க வேண்டும்: தவாக தலைவா் தி. வேல்முருகன்

கன்னட மொழி பிரச்னை தொடா்பாக நடிகா் கமல்ஹாசன் தொடுத்த வழக்கில் கா்நாடக உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பை மூவா் அல்லது ஐவா் அமா்வு விசாரிக்க வேண்டும் என்றாா் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி. வேல்முருக... மேலும் பார்க்க

விவசாயிகளின் வங்கிக் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தல்

கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தஞ்சாவூரில் இச்சங்கத்தின் சாா்பில் விவ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை; தேநீா்க்கடை தொழிலாளி கைது

பட்டுக்கோட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தேநீா்க்கடை தொழிலாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் சரகத்துக்குள்பட்ட ஒரு கிர... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் திருட்டு; 2 போ் கைது

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் மோட்டாா் சைக்கிள்கள் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்து திங்கள்கிழை சிறையில் அடைத்தனா்.தஞ்சாவூா் மாவட்டம், பட்டீஸ்வரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் மோட்ட... மேலும் பார்க்க