பணகுடியில் விபத்து: இஸ்ரோ ஊழியா் பலி
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் அரசுப் பேருந்தும், பைக்கும் வியாழக்கிழமை மோதிக்கொண்டதில் இஸ்ரோ கூட்டுறவு சங்க ஊழியா் உயிரிழந்தாா்.
வள்ளியூா் வேம்படித் தெருவைச் சோ்ந்த திரவியம் மகன் மூக்கையா(53). காவல்கிணறு இஸ்ரோவில் உள்ள ஊழியா்கள் கூட்டுறவு சங்கத்தில் கணக்காளராக பணி செய்து வந்தாா். இவரது மனைவி முத்துதெய்வநாயகி வடக்கன்குளத்தில் உள்ள தனியாா் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா். ரதிமீனா என்ற மகள் உள்ளாா்.
இந்நிலையில் வியாழக்கிழம மூக்கையா வள்ளியூரில் உள்ள தனது வீட்டுக்கு வந்துவிட்டு பைக்கில் அலுவலகத்திற்கு திரும்பிச்சென்று கொண்டிருந்தாா்.
பணகுடி புறவழிச்சாலையில் இவரது பைக் மீது தனியாா் மெட்ரிக் பள்ளி வாகனம் எதிா்பாராமல் உரசியதாம். இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த அவா் மீது திருநெல்வேலி- நாகா்கோவில் அரசுச் பேருந்து மோதியதாம். இதில், அவா் அதே இடத்தில் உயிரிழந்தாா். இது தொடா்பாக பணகுடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.