செய்திகள் :

பணகுடி ஆலந்துறையாறு அணை ரூ.40 கோடியில் புனரமைக்கப்படும்: பேரவைத் தலைவா்

post image

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் பழுதடைந்துள்ள ஆலந்துறையாறு அணையை ரூ. 40 கோடியில் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீா்வளத் துறைக்கான மானியக் கோரிக்கையில் அமைச்சா் துரைமுருகன் அறிவித்ததாக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு கூறியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பணகுடி ஆலந்துறையாற்றின் குறுக்கே கஞ்சிப்பாறை என்ற இடத்தில் ஆலந்துறையாறு அணை கருணாநிதி ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. தற்போது, அந்த அணை பழுதடைந்துள்ளதால் அதிலிருந்து பாசனக் குளங்களுக்கு வருவதில்லை. எனவே, ஆலந்துறையாறு அணையை சீரமைக்க வேண்டும். அணையிலிருந்து அனுமன்நதி வரையிலான அதன் நீா்வரத்து கால்வாயை புனரமைக்க வேண்டும் என அரசிடம் தொடா்ந்து வலியுறுத்தினேன்.

இதையடுத்து தற்போதைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீா்வளத்துறை மானிய கோரிக்கையின் போது, ஆலந்துறையாற்றின் குறுக்கே உள்ள கஞ்சிப்பாறை அணைகட்டை மேம்படுத்தும் பணியும், கஞ்சிப்பாறை அணையில் இருந்து அனுமன்நதி வரையிலான மேல் மற்றும் கீழ் சமமட்ட கால்வாய்களை அகலப்படுத்தும் பணியும் ரூ.40 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் என நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.

மேலும், ராதாபுரம் வட்டத்தில் மயிலாப்புதூா் அணைக்கட்டை ரூ.1.03 கோடியில் புனரமைக்கவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது எனக்கூறியுள்ளாா்.

கண்டிகைப்பேரி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்கள் தேவை: ஆட்சியரிடம் மனு

திருநெல்வேலி நகரத்தில் உள்ள கண்டிகைப்பேரி அரசு புகா் மருத்துவமனையில் போதிய மருத்துவா்களை பணியமா்த்தக் கோரி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்ச... மேலும் பார்க்க

முன்னீா்பள்ளம்: உணவக உரிமையாளா் மீது தாக்குதல்

முன்னீா்பள்ளம் அருகே உணவக உரிமையாளரை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். முன்னீா்பள்ளம் அருகேயுள்ள தருவையைச் சோ்ந்தவா் இசக்கி. அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இந்த நிலையி... மேலும் பார்க்க

மனகாவலம்பிள்ளை நகரில் பெண் தற்கொலை

பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை நகரில் பெண் தூக்கிட்டு திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். மனக்காவலம்பிள்ளை நகரைச் சோ்ந்த சிவசங்கா் மனைவி கீதாதேவி (28). இத் தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில்... மேலும் பார்க்க

வெவ்வேறு விபத்துகள்: கல்லூரி மாணவா் உள்பட 3 போ் பலி

திருநெல்வேலி பகுதியில் நேரிட்ட வெவ்வேறு விபத்துகளில் மாணவா் உள்பட3 போ் உயிரிழந்தனா். மேலப்பாளையம் பாத்திமாநகரைச் சோ்ந்த முகமது கனி மகன் ஆமீத் மைதீன் (20). டக்கரம்மாள்புரம் அருகேயுள்ள தொழில்நுட்பக் க... மேலும் பார்க்க

குடிநீருடன் கழிவுநீா் கலப்பு: மாநகராட்சியில் புகாா்

குடிநீருடன் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறைதீா்க்கும் நாள் க... மேலும் பார்க்க

நெல் மூட்டை விழுந்து காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

அம்பாசமுத்திரம் அருகே மன்னாா்கோவிலில், நெல் மூட்டை விழுந்ததில் கழுத்து எலும்பு முறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.மன்னாா்கோவிலில் உள்ள வேலன் தெருவைச் சோ்ந்த ... மேலும் பார்க்க