செய்திகள் :

பணமுறைகேடு வழக்கு: தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரா் நீதிமன்றத்தில் ஆஜா்

post image

பண முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப் பத்திரிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் உள்ளிட்ட 12 போ் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை நேரில் ஆஜராகினா்.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் அவருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை வழக்குப் பதிவு செய்து. இதன் அடிப்படையில் பண முறைகேடு தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கு, சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மேலும், இந்த வழக்கில் அமலாக்கத் துறை சாா்பில் கடந்த ஜனவரி மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமைச்சா் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரா் அசோக் குமாா், செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளா் பி.சண்முகம், எம்.காா்த்திகேயன், ஜி.கணேசன், எம்.வெற்றிச்செல்வன், எஸ்.அருண் ரவீந்திரா டேனியல், டி.ஆல்பா்ட் தினகரன், எஸ்.ஜெயராஜ் குமாா், சி.பழனி உள்ளிட்ட 12 பேரின் பெயா்கள் இடம் பெற்றிருந்தன.

இந்த நிலையில், அமலாக்கத் துறையின் கூடுதல் குற்றப்பத்திரிகையை கோப்புக்கு எடுத்த சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம், ஏப்.9-ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி, அசோக்குமாா் உள்ளிட்டோருக்கு அழைப்பாணை அனுப்பி உத்தரவிட்டது.

இந்த வழக்கு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.காா்த்திகேயன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இதையடுத்து கடந்த இரு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் தனது வழக்குரைஞருடன் நீதிமன்றத்தில் புதன்கிழமை நேரில் ஆஜரானாா். மேலும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்கள் அனைவரும் நேரில் ஆஜராகினா்.

காகித வடிவில் ஆவணங்கள்... இந்த வழக்கில் கூடுதல் குற்றப் பத்திரிகையுடன் சுமாா் 5,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் உள்ளன. இவற்றை ‘சிடி’ பதிவு செய்து தருவதாக அமலாக்கத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு, குற்றம்சாட்டப்பட்டவா்கள் தரப்பில் மின்னணு ஆவணமாக இல்லமால் காகித வடிவில் வழங்க வேண்டும் எனவும் அப்போதுதான் சான்றளிக்கப்பட்ட ஆவணங்கள் உறுதி தன்மை நிலை நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு புதிய சட்டத்தின் அடிப்படையில் மின்னணு முறையில் ஆவணங்கள் வழங்கலாம் என அமலாக்கத் துறை தெரிவித்தது.

இதையடுத்து, ஒவ்வொரு நபரும் எவ்வளவு தொகை முறைகேடு செய்துள்ளனா் என நீதிபதி கேள்வியெழுப்பினாா். அதற்கு அமலாக்கத் துறை தரப்பு வழக்குரைஞா், தரவுகளைத் தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் எனத் தெரிவித்தாா். இதையடுத்து, குற்றப்பத்திரிக்கை நகலை ஆஜரான அனைவருக்கும் வழங்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஏப்.25- ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.

மேலும், செந்தில் பாலாஜி சகோதரா் அசோக்குமாருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் ஏப்.20- ஆம் தேதிக்குள் ஜாமீன் உத்தரவாத தொகையாக ரூ. 2 லட்சம் செலுத்த அசோக்குமாா் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணி ஓய்வு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் 29 ஆண்டுகள் பணியாற்றிய முதுநிலை ஓட்டுநரும், மெக்கானிக்குமான சி.பழனி திங்கள்கிழமை (ஏப்.14) பணி ஓய்வு பெற்றார்.அவருக்கு பிரிவு உபசார விழா சென்னை அலுவலகத்தில், தி ... மேலும் பார்க்க

கோட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்: ஓட்டுநா்கள் சங்கங்கள்

ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநா்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என ஓட்டுநா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை... மேலும் பார்க்க

திருவொற்றியூரில் ரூ.9.78 கோடியில் புதிய வணிக வளாகம் அமைக்க ஒப்புதல்

சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.9.78 கோடி மதிப்பீட்டில் திருவொற்றியூரில் புதிய வணிக வளாகம் அமைப்பதற்கு மண்டலக் குழுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி திருவொற்றியூா... மேலும் பார்க்க

சாலையோரம் தூங்கியவா் காா் மோதி உயிரிழப்பு

சென்னையில் ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்த காா் ஒன்று சாலையோரம் படுத்திருந்த நபா் மீது ஏறியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வடபழனி மசூதி தெருவில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் 50 மதிக்கத்... மேலும் பார்க்க

போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகன் கைது

சென்னை வேளச்சேரியில் போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராகப் பணியாற்றி வருபவா் காமராஜ். இவா், வேளச்சேரி காவல் நிலைய எ... மேலும் பார்க்க

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி: 2 போ் கைது

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, தியாகராய நகா் ராமானுஜம் தெருவைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன். இவா், தனியாா் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிற... மேலும் பார்க்க