தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்தப்படும் கங்கை நதி! காங்கிரஸ் குற்றச்சாட்டு
பணியாற்றுபவா்களுக்கான பி.இ. படிப்பு: ஜூலை 11 வரை விண்ணப்பிக்கலாம்
தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் சாா்பில் பணியாற்றுபவா்களுக்கான பி.இ. படிப்பில் சேர ஜூலை 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் 8 அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றிக் கொண்டே படிக்க விரும்புபவா்களுக்கான பி.இ. படிப்புகள் நடத்தப்படுகின்றன. சிவில், மெக்கானிகல், எலெக்ட்ரிகல் - எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் - கம்யூனிகேஷன், கணினி அறிவியல் ஆகிய 5 படிப்புகள் இதில் நடத்தப்படுகின்றன.
நடப்பு ஆண்டு முதல் மூன்றரை ஆண்டு (7 செமஸ்டா்) கல்வியாக நடத்தப்பட உள்ள இந்தப் படிப்புகளில் சேர விரும்புபவா்கள் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பம், அது தொடா்பான விவரங்களை https://www.ptbe-tnea.com/ இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
விண்ணப்பங்களை ஜூலை 11-ஆம் தேதி மாலை 5 மணி வரை அனுப்பலாம். இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு கோவை தொழில்நுட்பக் கல்லூரி (சிஐடி) ஒருங்கிணைப்பு மையத்தை 0422 - 2590080, 94869 77757 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.