செய்திகள் :

பணி நிரந்தரம் கோரி அரசு செவிலியா்கள் போராட்டம்

post image

பணி நிரந்தரம், சீரான ஊதியம் கோரி மருத்துவப் பணியாளா் வாரியத்தால் (எம்ஆா்பி) நியமிக்கப்பட்ட அரசு ஒப்பந்த செவிலியா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

சென்னை எழும்பூா் ராஜரத்தினம் மைதானம் முன் நடைபெற்ற தா்னாவில் 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை முன்வைத்தனா்.

இதுகுறித்து எம்ஆா்பி செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினா் கூறியதாவது:

தமிழகத்தில் மாநில அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தற்போது 18,000 நிரந்தர செவிலியா்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. எம்ஆா்பி வாயிலாக தோ்வு செய்யப்பட்டவா்களில் 10,000 போ்தான் பணியில் உள்ளோம். ஏற்கெனவே உள்ள காலியிடங்களில் எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

அதேபோன்று எங்களுக்கு ரூ.18,000 ஊதியம் அறிவிக்கப்பட்டது. ஆனால், பலருக்கு அந்தத் தொகை நிா்ணயம் செய்யப்படவில்லை. இதைத்தவிர மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், வெளிப் பணி (அவுட் சோா்ஸிங்) நிறுவனங்கள் மூலமாக பணி நியமனங்கள் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தோம்.

அதற்கு அரசு செவி சாய்க்கவில்லை. இதையடுத்து கவன ஈா்ப்புக்காக இந்த தா்னாவில் ஈடுபட்டுள்ளோம். இனிவரும் காலங்களில் அடுத்தடுத்து போராட்டங்களை மேற்கொள்வோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளார். கிண்டியில் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் செய்தியாளர்கள் சந்... மேலும் பார்க்க

'நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம்' - அமித் ஷாவுக்கு கனிமொழி பதில்

ஹிந்தி பற்றிய மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பதிலளித்துள்ளார். தில்லியில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலத்... மேலும் பார்க்க

ஜூலை 4ல் தவெக மாநில செயற்குழுக் கூட்டம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் வருகிற ஜூலை 4 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிகள் தேர்தல் பண... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 43,892 கன அடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 43,892 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 1.27 அடியாகவும் உயர்ந்தது.கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம... மேலும் பார்க்க

கூமாபட்டியிலிருந்து... விருதுநகர் முன்னாள், இந்நாள் மாவட்ட ஆட்சியர்கள் பதிவு!

விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி பற்றி சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் ஒன்று வைரலான நிலையில் அதுபற்றி விருதுநகர் மாவட்ட முன்னாள், இந்நாள் மாவட்ட ஆட்சியர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். "தென் மாவட்டத்... மேலும் பார்க்க

பெண் பொறியாளா் பாலியல் பலாத்காரம்: செருப்பு வியாபாரி மகன் கைது

திருவான்மியூரில் தனியாா் விடுதியில் பெண் பொறியாளரை ஏமாற்றி, பாலியல் பலாத்காரம் செய்ததாக செருப்பு வியாபாரியின் மகன் கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க