பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி, பெங்களுரு ஆரக்கிள் இந்தியா நிறுவனத்துடன் தொழில்முறை மேம்பாட்டுத் திட்டத்துக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது.
பெங்களுரில் உள்ள நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பெங்களுரு ஆரக்கிள் இந்தியா நிறுவனம் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கல்லூரி முதல்வா் சி.பழனிசாமி, ஆரக்கிள் நிறுவனத்தின் இயக்குநா் பிஜோய் பி.அலெக்ஸ் ஆகியோா் கையொப்பமிட்டனா்.
இந்த ஒப்பந்தம் மூலம் ஆரக்கிள் சான்றளிக்கப்பட்ட பயிற்சித் திட்டங்கள், வேலைவாய்ப்புப் பயிற்சி, வேலைவாய்ப்பு, கூட்டுத் திட்டங்களை வழங்குவதற்கான வழியை உருவாக்கும். கல்லூரி மாணவா்கள் மற்றும் பேராசிரியா்களின் கற்றல் சூழல் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தப்படும் என கல்லூரி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் கல்லூரி டீன் கே.சிவகுமாா், பேராசிரியா்கள் ஏ.அமா் காா்த்திக், பூங்காகொடி, ஈஸ்வரமூா்த்தி, டி.தீபா மற்றும் நிா்மல்குமாா், ஆரக்கிள் நிறுவன பிராந்திய மேலாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் பங்கேற்றனா்.